என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஓடும் ரெயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்
ஜோலார்பேட்டை:
சேலம் உட்கோட்ட ரெயில்வே சிறப்பு தனி படை பிரிவினர் சேலம் முதல் காட்பாடி வரை உள்ள ரெயில் நிலையங்கள் மற்றும் ஓடும் ரெயில்களில் கஞ்சா மது பாட்டில் உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என்பது குறித்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ரெயிலில் சோதனை
இந்நிலையில் நேற்று காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை வரை தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரெயில் குடியாத்தம் - ஆம்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்து கொண்டிருந்தபோது ரெயிலின் முன்பக்கம் உள்ள பொது பெட்டியில் லக்கேஜ் ரேக்கில் கேட்பாரற்று கிடந்த நீல நிற பையை சோதனை செய்தபோது அதில் 4 ப ண்டல்களில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதனை அடுத்து ரெயில்வே சிறப்பு தனி படை பிரிவினர் அப் பெட்டியில் பயணம் செய்த நபர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட உடமை குறித்து கேட்டபோது யாரும் உரிமை கூறவில்லை.
இதனால் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு கிலோ கஞ்சாவை கடத்திய நபர் மீது நடவடிக்கை மேற்கொள்ள ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் ரெயில்வே போலீசார் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தியவர் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்