என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரசு கலைக் கல்லூரியில் முப்பெரும் விழா
- தெளிவான குறிக்கோலுடன் மாணவர்கள் படித்து சமுதாயத்தை உருவாக்கும் தூண்களாக உருவாக வேண்டும்.
- சமுதாய சீர்கேட்டை ஏற்படுத்தகூடிய தீய பழக்கங்களுக்கு அடிமையாகமல் இருகக வேண்டும்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் தெளிவான குறிக்கோலுடன் மாணவர்கள் படித்து சமுதாயத்தை உருவாக்கும் தூண்களாக உருவாக வேண்டும். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை மதித்து நடக்க வேண்டும்.
இந்த மாணவ பருவத்தில் படிப்பை மட்டும் மனதில் கொள்ள வேண்டும். சமுதாய சீர்கேட்டை ஏற்படுத்தகூடிய தீய பழக்கங்களுக்கு அடிமையாகமல் இருகக வேண்டும். வாழ்கை தரத்தை உயர்த்திடும் வகையில் அனைத்து துறைகளிலும் உயரவேண்டும்.
கிராமத்தில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் சிறந்தவர்களாக உருவாகி சாதனை படைத்து வருகின்றனர்.என மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் அன்பரசி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், சேலம் ஏரோபார்க் நிறுவனர் சுந்தரம், ஆகியோர் கலந்து கொண்டனர்.
உடற்கல்வி இயக்குநர் அருண் நேருவிலையாட்டு அறிக்கை வாசித்தார். பல்கலை கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் செந்தில்குமார், தமிழ் துறை பேராசிரியர் சித்திரை செல்வி வரவேற்பு உரையாற்றினார். கணிதவியல் துறை தலைவர் ஐயப்பன், கண்ணி அறிவியல் துறை தலைவர் சங்கீதா, வனிகவியல் துறை தலைவர் பசுபதி, ஆங்கில துறை தலைவர் புரோத்தமன், இயற்பியல் துறை தலைவர் ரவி ஆகியோர் மாணவ, மாணவிகளிடையே சிறப்புரையாற்றினார்கள். இருபால் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்