search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு கலைக் கல்லூரியில் முப்பெரும் விழா
    X

     கல்லூரியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிய போது எடுத்த படம்.

    அரசு கலைக் கல்லூரியில் முப்பெரும் விழா

    • தெளிவான குறிக்கோலுடன் மாணவர்கள் படித்து சமுதாயத்தை உருவாக்கும் தூண்களாக உருவாக வேண்டும்.
    • சமுதாய சீர்கேட்டை ஏற்படுத்தகூடிய தீய பழக்கங்களுக்கு அடிமையாகமல் இருகக வேண்டும்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

    இவ்விழாவில் தெளிவான குறிக்கோலுடன் மாணவர்கள் படித்து சமுதாயத்தை உருவாக்கும் தூண்களாக உருவாக வேண்டும். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை மதித்து நடக்க வேண்டும்.

    இந்த மாணவ பருவத்தில் படிப்பை மட்டும் மனதில் கொள்ள வேண்டும். சமுதாய சீர்கேட்டை ஏற்படுத்தகூடிய தீய பழக்கங்களுக்கு அடிமையாகமல் இருகக வேண்டும். வாழ்கை தரத்தை உயர்த்திடும் வகையில் அனைத்து துறைகளிலும் உயரவேண்டும்.

    கிராமத்தில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் சிறந்தவர்களாக உருவாகி சாதனை படைத்து வருகின்றனர்.என மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் அன்பரசி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், சேலம் ஏரோபார்க் நிறுவனர் சுந்தரம், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    உடற்கல்வி இயக்குநர் அருண் நேருவிலையாட்டு அறிக்கை வாசித்தார். பல்கலை கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் செந்தில்குமார், தமிழ் துறை பேராசிரியர் சித்திரை செல்வி வரவேற்பு உரையாற்றினார். கணிதவியல் துறை தலைவர் ஐயப்பன், கண்ணி அறிவியல் துறை தலைவர் சங்கீதா, வனிகவியல் துறை தலைவர் பசுபதி, ஆங்கில துறை தலைவர் புரோத்தமன், இயற்பியல் துறை தலைவர் ரவி ஆகியோர் மாணவ, மாணவிகளிடையே சிறப்புரையாற்றினார்கள். இருபால் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×