என் மலர்tooltip icon

    தூத்துக்குடி

    • ஏராளமான பொதுமக்களும் விவசாய தோட்டங்களும், கருப்பட்டி, கற்கண்டு, உற்பத்தியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
    • வாழை விவசாயிகள், வாழை குலைகளை வெட்டி தண்ணீரில் எடுத்து கொண்டு வருகின்றனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத கனமழை மாவட்டத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

    தூத்துக்குடி மாநகர பகுதிகள் மட்டுமின்றி திருச்செந்தூர், உடன்குடி, மெஞ்ஞானபுரம், ஆழ்வார்திருநகரி, ஏரல், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிய ஆயிரக்கணக்கான கிராமங்கள் தனித்தீவுகளாக மாறின.

    இப்பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து முடங்கியது. வெள்ளத்தில் சிக்கிய ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.

    அதேநேரம் இதுவரை பல ஆண்டுகளாக மழை இல்லாத பகுதிகளாக இருந்து வந்த உடன்குடி பகுதியில், கனமழை காரணமாக அனைத்து குளங்கள், குட்டைகள், ஆறு மற்றும் ஏராளமான தற்காலிகமான நீர் பிடிப்பு பகுதிகள் எல்லாமே சுமார் 5 ஆண்டுகளுக்கு பின் முழுமையாக நிரம்பியது.

    இந்த ஆண்டு எல்லாமே முழுமையாக நிரம்பிவிட்டது என்று விவசாயிகள் பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி ஒரு சில நாட்கள் கூட நீடிக்கவில்லை.

    ஸ்ரீவைகுண்டம் அணையில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அத்துடன் இணைந்த சடைய நேரி கால்வாயில் தண்ணீர் அளவுக்கு அதிகமாக வந்து கொண்டிருந்தது.

    இதனால் உடன்குடி அருகே உள்ள சடையனேரி குளம் கிழக்கு பகுதி உடைந்தது, அதில் இருந்து வெளியேறிய வெள்ளநீர் உடன்குடி ஒன்றிய பகுதியில் உள்ள மெஞ்ஞானபுரம், மானிக்கபுரம், லட்சுமிபுரம், வேப்பங்காடு, மருதூர் கரை, செட்டியாபத்து, பரமன்குறிச்சி, என்.எஸ். நகர், சிங்கராயபுரம், வட்டன் விளை, வெள்ளாளன் விளை, சீயோன்நகர், செட்டி விளை, சிதம்பரபுரம் பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது.

    இதனால் ஏராளமான பொதுமக்களும் விவசாய தோட்டங்களும், கருப்பட்டி, கற்கண்டு, உற்பத்தியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    தேக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி மதிப்புள்ள கருப்பட்டி, கற்கண்டு அனைத்தும் மழையிலும், வெள்ள நீரிலும் நனைந்தும் நாசமாயின.

    மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையம், அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பரமன்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியன தண்ணீர் சூழ்ந்து இருந்ததால் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் தற்காலிகமாக சுமார் 10 நாட்கள் வேறு இடங்களில் செயல்பட்டது. இதன் காரணமாக உடன்குடியில் இருந்து மெஞ்ஞானபுரம் செல்லும் நேர்வழி சாலையும், உடன்குடியில் இருந்து பரமன் குறிச்சி செல்லும் நேர்வழிச் சாலையும் முழுமையாக துண்டிக்கப்பட்டது.


    நெல்லை மற்றும் தூத்துக்குடிக்கு செல்லும் மக்கள் சுமார் 25 நாட்களாக பல கிலோமீட்டர் சுற்றி சுற்றி சென்று வந்தனர்.

    இந்நிலையில், வட்டன் விளை மற்றும் சீயோன்நகர் பகுதியில் முதல் கட்டமாக ஏராளமான பம்புசெட், நீர் மோட்டார் மூலம் தேங்கி கிடந்த தண்ணீரை அருகில் உள்ள செம்மணல் தேரியில் கொண்டு சேர்க்கும் பணி இரவு பகலாக 10 நாட்கள் நடந்தது.

    தண்ணீர் அப்புறப்படுத்தவில்லை. குறையவும் இல்லை, அடுத்து மெஞ்ஞானபுரம் அருகே உள்ள மருதூர் கரையில் சாலையை உயர்த்தி 15 நாட்களுக்கு பின் போக்குவரத்தை தொடங்கினர். உடன்குடியில் இருந்து செட்டியாபத்து மெஞ்ஞான புரம் வழியாக நெல்லைக்கு போக்குவரத்து தொடங்கியது.

    அதன் பின்பு சியோன் நகர் அருகே பல லாரி மணல் மற்றும் கற்களை கொட்டி தரைப் பாலத்தை சுமார் 25 அடி உயர்த்தி 25 நாட்களுக்குப் பின் போக்குவரத்தை தொடங்கினர்.

    ஆனாலும் இன்று வரை சுமார் 40 நாட்கள் ஆகியும் வட்டன் விளை ஊருக்குள் பரமன்குறிச்சி மெயின் ரோட்டில் இருந்து உள்ளே வர முடியாத அளவிற்கு சுமார் 10 அடி ஆழத்திற்கு இன்னும் தண்ணீர் தேங்கிகிடக்கிறது.

    இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது தோட்டத்தில் உள்ள தேங்காய்கள் மற்றும் விவசாய பொருட்ககளை தோட்டத்தில் இருந்து கொண்டு வருவதற்கு தற்காலிக படகு போல அமைத்து அதில் சென்று தேங்காய் மற்றும் விவசாய பொருட்களை வெளியில் கொண்டு வருகிறார்கள்.

    தோட்டத்திற்கு நீச்சலில் செல்கிறார்கள். வாழை விவசாயிகள், வாழை குலைகளை வெட்டி தண்ணீரில் எடுத்து கொண்டு வருகின்றனர்.


    இன்று வரை விவசாயிகள் மற்றும் பல தரப்பட்ட மக்கள் வடியாத வெள்ளத்தில் தங்களது வாழ்க்கையை கடத்தி வருகின்றனர்.

    இது பற்றி விவசாயிகள் கூறும் போது, நிரந்தரமாக வடிகால் அமைத்தால் தான் இனி தண்ணீர் வடியும். தண்ணீர் வடிவதற்கு எந்த விதமான சூழ்நிலையும் தற்போது இல்லை.

    தண்ணீர் தேங்கி 40 நாட்களை கடந்து விட்டதால் அதிகமான அளவில் சேறும்சகதியும் சேர்ந்து விட்டதால் தேங்கியதண்ணீர் பூமிக்குள் இறங்கும் நிலைமை இல்லை.

    அதனால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வடிகால் அமைத்தால் தான் எங்கள் விவசாயங்களை நாங்கள் காப்பாற்ற முடியும். மீண்டும் புதியதாக விவசாயம் செய்ய முடியும் என்றனர்.

    தரைமேல்பிறக்க வைத்தான், எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான் என்ற ஒரு சினிமாபாடலை பாடிக்கொண்டு விவசாயிகளும், கிராம மக்களும் தண்ணீருக்குள் சென்று தங்கள் தோட்டத்தில் உள்ள விவசாய பயிர்களை வெளியே கொண்டு வருவது மிகவும் பரிதாபமாகவும், பரிதவிப்பாகவும் உள்ளது.

    • தூத்துக்குடியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு மாலையில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முறப்பநாடு போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்துங்கநல்லூர்:

    நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள அனைத்தலையூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.

    இவர் நேற்று காலை தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனது சொகுசு காரில் தூத்துக்குடியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு மாலையில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது நெல்லை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வல்லநாடு அருகே காரில் குடும்பத்துடன் வந்து கொண்டிருந்தபோது திடீரென காரின் என்ஜின் பகுதியில் இருந்து புகை வெளியே வந்துள்ளது. இதைப்பார்த்த கோவிந்த ராஜ் காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு தனது மனைவி, குழந்தைகளுடன் அவசர அவசரமாக காரில் இருந்து கீழே இறங்கி உள்ளார். அதற்குள் காரின் என்ஜின் பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்தது.

    அதைக் கண்ட அப்பகுதியில் இருந்த மக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இருந்தும் கார் அதிக அளவில் தீயில் சேதமடைந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முறப்பநாடு போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம், அதில் இருந்த 4 பேர் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்த சம்பவமும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து முறையிட்டு வந்துள்ளனர்.
    • மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட ஆவுடையார்புரம் பகுதியில் 100 குடும்பங்கள் 4 தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர்.

    அவர்களின் பல கோடி மதிப்புள்ள நிலத்தை சிலர் அபகரிப்பு முயற்சி செய்து வருவதாக அப்பகுதி பொது மக்கள் புகார் கூறி வருகின்றனர்.

    இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து முறையிட்டு வந்துள்ளனர்.

    இந்நிலையில், ஆவுடையார்புரம் பகுதியில் மது போதையில் வீட்டை அடித்து நொறுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் மத்திய பாகம் போலீஸ் நிலையத்தை நேற்று இரவு முற்றுகையிட்டனர்.

    அப்போது தூத்துக்குடி மாநகர மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை செயலாளர் வக்கீல் செல்வகுமார் கூறுகையில், இப்பகுதியில் 3 நபர்கள் மது அருந்தி கொண்டு இருந்தனர்.

    அதை பொதுமக்கள் தட்டிக்கேட்டனர். அதற்கு அவர்களின் வீட்டை அந்த 3 பேரும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

    இச்சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து இன்று போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளோம் என்றார்.

    இதுகுறித்து மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    TNL04190124: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பசுவந்தனை சாலையில் ஒரு திருமண மண்டபம் அருகே தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று ஏ.டி.எம் மையத்திற்கு வாடிக்கை யாளர்கள் பணம் எடுக்க சென்ற போது ஏ.டி.எம்.எந்திரத்தின் கீழ் பகுதி

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பசுவந்தனை சாலையில் ஒரு திருமண மண்டபம் அருகே தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று ஏ.டி.எம் மையத்திற்கு வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க சென்ற போது ஏ.டி.எம்.எந்திரத்தின் கீழ் பகுதி திறந்து கிடந்தது. மேலும் அதில் இருந்து எச்சரிக்கை அலாரம் சத்தம் ஒலித்து கொண்டே இருதுள்ளது.

    இதனையடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதேநேரத்தில் வங்கி தரப்பில் இருந்தும் எச்சரிக்கை மணி ஒலிப்பது குறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அங்கு விசாரணை நடத்தினர். மேலும் ஏ.டி.எம். மையத்திலிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தபோது அதில் மர்ம நபர் ஒருவர் அன்று அதிகாலை 4.33 மணிக்கு ஏ.டி.எம். எந்திரத்தின் பணம் இருக்கும் அடிப்பகுதியை கழற்ற முயற்சி செய்து கொண்டிருக்கும் காட்சிகளும், எச்சரிக்கை அலாரம் சத்தம் ஒலித்ததை தொடர்ந்து அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடியதும் அதில் பதிவாகி இருந்தது.


    இதையடுத்து கைரேகை நிபுணர்கள், அந்த ஏ.டி.எம். மையத்திற்கு வரவ ழைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் இது குறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலைய போலீசார் தனிப்படை அமைத்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் அடிப்படையில் மர்ம நபரை தேடி வந்தனர்.

    இந்நிலையில் அந்த மர்ம நபர் கோவில்பட்டி பசுவந்தனை ரோடு, ராமலட்சுமி நகரை சேர்ந்த சங்கர் (வயது 45) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏ.டி.எம் மையத்திற்கு வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க சென்ற போது ஏ.டி.எம். எந்திரத்தின் கீழ் பகுதி திறந்து கிடந்தது.
    • வாடிக்கையாளர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பசுவந்தனை சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகே தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது.

    இன்று காலையில் ஏ.டி.எம் மையத்திற்கு வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க சென்ற போது ஏ.டி.எம். எந்திரத்தின் கீழ் பகுதி திறந்து கிடந்தது.

    மேலும் அதிலிருந்து எச்சரிக்கை அலார சத்தம் ஒலித்துக் கொண்டே இருந்துள்ளது. இதனை கண்டு வாடிக்கையாளர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் வங்கி தரப்பில் இருந்தும் எச்சரிக்கை மணி ஒலிப்பது பற்றி கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.


    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஏ.டி.எம். மையத்தில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் இன்று அதிகாலை 4.33 மணிக்கு ஏ.டி.எம். எந்திரத்தின் பணம் இருக்கும் அடிப்பகுதியை திறக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் காட்சிகள் இருப்பது அதில் பதிவாகி இருந்தது.

    எச்சரிக்கை அலார சத்தம் ஒலித்ததை தொடர்ந்து அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடியதும் அந்த காட்சிகள் மூலம் தெரியவந்தது.

    இதையடுத்து கைரேகை நிபுணர்கள் ஏ.டி.எம். மையத்திற்கு வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • கடல் மற்றும் நாழிகிணறு தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
    • பொங்கல் திருநாளை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

    குறிப்பாக தைப் பொங்கல் திருநாளில் முருகப்பெருமானை வழிபாடு செய்து பொங்கல் திருநாளை கொண்டாடுவது பெரும்பாலான இந்துக்களிடம் பழக்கமாக உள்ளது.

    அந்த வகையில் பொங்கல் பண்டிகையையொட்டி முருகப் பெருமானை தரிசிக்க கடந்த சில நாட்களாக தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வாகனங்களில் திருச்செந்தூர் வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில் நாளை ( திங்கட்கிழமை) பொங்கலன்று முருகப்பெருமானை தரிசிப்பதற்காக திருச்செந்தூரில் இன்று அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் காணப்பட்டது.

    கடல் மற்றும் நாழிகிணறு தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    ஏராளமான பக்தர்கள் நீண்ட அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும், பல சிறுவர்கள் ஆண்டி கோலமிட்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    நாளை (15-ந் தேதி) தை 1-ந் தேதி பொங்கல் திருநாளை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது. 1.30 விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    பொங்கல் திருநாளை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கோவில் வளாகம் மற்றும் கடற்கரையில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    • தனக்கு கண் பார்வை பிரச்சினை இருப்பதாகவும், அதற்கு மருத்துவ சிகிச்சை வேண்டும் என்று கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தார்.
    • சிறுமியிடம் உனது தங்கையை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கனிமொழி எம்.பி. அறிவுரை கூறினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டாரத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கனிமொழி எம்.பி. கடந்த மாதம் 27-ல் பார்வையிட்டார். அப்போது, திருச்செந்தூர் அருகே மேலாத்தூர் சொக்கப் பழங்கரை கிராமத்தில் கண் பார்வை குறைபாடுள்ள சிறுமியை கண்ட கனிமொழி எம்.பி, அந்த சிறுமியின் அருகே சென்று கண் பார்வை குறைபாடு குறித்து விசாரித்தார். அதற்கு அந்த சிறுமி, தனது பெயர் ரேவதி என்றும் 7-ம் வகுப்பு படித்து வருவதாகவும் கூறினார். மேலும் தனக்கு கண் பார்வை பிரச்சினை இருப்பதாகவும், அதற்கு மருத்துவ சிகிச்சை வேண்டும் என்று கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தார். அதற்கு உடனடியாக சரி செய்து விடலாம் என சிறுமிக்கு கனிமொழி எம்.பி. நம்பிக்கையும், ஊக்கமும் அளித்தார்.

    தொடர்ந்து, கனிமொழி எம்.பி.யின் ஏற்பாட்டில் அந்த சிறுமிக்கு நெல்லையில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் கடந்த 6-ந் தேதி காலை கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மாலை வீடு திரும்பினார். அதைத் தொடர்ந்து, ஏரல் தாசில்தார் கோபால கிருஷணன் சொக்கப்பழங்கரை கிராமத்துக்கு சென்று சிறுமி ரேவதியை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், கனிமொழி எம்.பி.யும் சிறுமி ரேவதியிடம் தொலைபேசியில் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். அப்போது அந்த சிறுமிகண் அறுவை சிகிச்சைக்கு உதவியதற்கு நன்றி கூறியதுடன், தான் வளர்ந்த பிறகு மருத்துவராக பணியாற்றுவேன் எனக் கூறியிருந்தார்.

    இந்நிலையில் கனிமொழி எம்.பி.யை தனது தாய், தங்கையுடன் நேரில் சந்தித்த சிறுமி ரேவதி அவருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது சிறுமியிடம் உனது தங்கையை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கனிமொழி எம்.பி. அறிவுரை கூறினார். 

    • ரம்ஜான், தீபாவளி, பொங்கல் மற்றும் திருமண முகூர்த்த காலங்களில் ஆடுகள் விற்பனை களை கட்டும்.
    • வெளிமாநில ஆடு ரகங்கள் எடைக்கு ஏற்ப ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது.

    எட்டயபுரம்:

    தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை உள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கூடும் இந்த சந்தைக்கு கிராமப்புறங்களில் வளர்க்கப்படும் ஆடுகள் கொண்டுவரப்படும்.

    நெல்லை, மதுரை, திருச்சி, சென்னை, கோவை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் வாங்க, விற்க வியாபாரிகள் வருவார்கள். வாரந்தோறும் இங்கு சுமார் ரூ.2 கோடி வரை விற்பனை நடைபெறும்.

    ரம்ஜான், தீபாவளி, பொங்கல் மற்றும் திருமண முகூர்த்த காலங்களில் ஆடுகள் விற்பனை களை கட்டும். இதனால் சுமார் ரூ.6 கோடி முதல் ரூ.10 கோடி வரை விற்பனை நடைபெறும்.

    இந்தாண்டு பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. 16-ம் தேதி இறைச்சி விற்பனை அதிகமாக நடைபெறும்.

    இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று மதியம் முதல் ஆட்டுச்சந்தை களை கட்டியது. தொடர் மழை காரணமாக கடந்த 2 வாரங்களாக ஆட்டுச் சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைவாக வந்த நிலையில் இன்று சந்தைக்கு சுமார் 10 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

    மேலும் கேரளா மாநிலத்தில் இருந்தும் சிலர் கால்நடை வளர்ப்பவர்கள் தங்களது கால்நடைகளை கொண்டு வந்தனர். வழக்கமான நாட்டு ரகங்களுடன் ஹைதராபாத் ரக காது ஆடுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

    மலப்பாரி, பிட்டெல், சிரோகி, தலைச்சேரி, ஜம்னாபாரி உள்ளிட்ட வெளிமாநில ஆடு வகை ரகங்களும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன.

    10 கிலோ எடை கொண்ட நாட்டு ரக ஆடுகள் ரூ. 9 ஆயிரம் முதல் ரூ. 12 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. இது கடந்த வாரங்களில் விட சற்று விலை அதிகம் தான் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வெளிமாநில ஆடு ரகங்கள் எடைக்கு ஏற்ப ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது.

    தொடர் மழையினால் கடந்த 2 வாரங்களாக விற்பனை மந்தமாக இருந்த நிலையில் பொங்கல் பண்டிகை வியாபாரம் விறுவிறுப்பாக இருந்ததாகவும், ஆடுகள் வரத்து அதிகமாக இருந்தது.

    கறிக்காக வாங்கும் ஆடுகள் விற்பனை அதிகமாக காணப்பட்டதாகவும், ரூ. 7 கோடி வரைக்கும் இந்த பொங்கல் பண்டிகைக்கு விற்பனை நடைபெற்று இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    கேரளா மாநிலத்தில் இருந்து ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்த கால்நடை வளர்ப்பவர்கள் கூறும்போது, எட்டயபுரம் சந்தையை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.

    இன்று முதன்முறையாக ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். இன்றைக்கு கூட்டமும் அதிகமாக உள்ளது. விற்பனையும் நன்றாக உள்ளது என்றனர்.

    • கடலுக்கு மீனவர்கள் செல்லலாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
    • நாட்டுப்படகுகளில் மீனவர்கள் உற்சாகமாக மீன்பிடிக்க சென்றனர்.

    தூத்துக்குடி:

    வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதைத்தொடர்ந்து அனைத்து படகுகளும் கரையில் நிறுத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் அவர்கள் மீன்படிக்க செல்லவில்லை.

    இந்நிலையில் இன்று முதல் கடலுக்கு மீனவர்கள் செல்லலாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 2 நாட்களுக்கு பின்னர் இன்று அதிகாலை முதல் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அந்த வகையில் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 245 விசைப்படகுகளும் மாவட்டத்தில் உள்ள 200 விசைப்படகுகள் மற்றும் 5 ஆயிரம் நாட்டுப்படகுகளில் மீனவர்கள் உற்சாகமாக மீன்பிடிக்க சென்றனர்.

    • பனங்கிழங்கு தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ குணமுள்ள பொருளாகும்.
    • இந்த ஆண்டு தொடர் மழை பெய்த காரணத்தினால் பனங்கிழங்கு விளைச்சல் நன்றாக வந்துள்ளது.

    எட்டயபுரம்:

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக, விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைவித்த பயிர்களை அறுவடை செய்ய, அவற்றுக்கு பூஜை செய்து பணிகளை தொடங்குவார்கள்.

    பூஜையில் நெல் மணிகள், காய்கறிகள், மஞ்சள் குலை ஆகியவற்றுடன் பனங்கிழங்கும் பிரதானமாக இடம்பெற்றிருக்கும்.

    தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரத்தின் பாகங்களில் பதநீர், நுங்கு, கருப்பட்டி, பனங்கற்கண்டு, ஓலை, பனங்கட்டைகள் என அனைத்தும் பயன்படுகிறது.

    இதில், நுங்கு பருவம் கடந்துவிட்டால், அது பனம் பழமாக மாறும்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, காம நாயக்கன்பட்டி, முத்துலாபுரம், அயன்வடமலாபுரம், வேம்பார், விளாத்திகுளம், குளத்தூர் பகுதிகளில் லட்சக்கணக்கான பனை மரங்கள் உள்ளன.

    இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத கடைசியில் பனை விதைகளை தனித்தனியாக பிரித்து, குறுமணல் பகுதியில் தொழிலாளர்கள் புதைத்து வைப்பார்கள். புரட்டாசி மாதத்தில் பெய்யும் மழையில் ஈரப்பதம் ஏற்பட்டு, விதை முளைத்து, பனங்கிழங்காக மாறும்.

    இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், அயன்வடமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குறுமணலில் இருந்து பனங்கிழங்கு அறுவடை பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.

    இங்கு அறுவடை செய்யப்படும் பனங்கிழங்குகளை கோவில்பட்டி, சாத்தூர், ராஜ பாளையம், மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

    இதுகுறித்து விவசாயி வரதராஜன் கூறும்போது, "பனங்கிழங்கு தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ குணமுள்ள பொருளாகும். இந்தாண்டு ஒரு கிழங்கு ரூ. 4 முதல் 6 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த சில ஆண்டுகளாக மழை இல்லாத நிலையில் இந்த ஆண்டு தொடர் மழை பெய்த காரணத்தினால் பனங்கிழங்கு விளைச்சல் நன்றாக வந்துள்ளது. 20 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு ரூ.100 முதல் ரூ.125 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தமிழக அரசு ஆண்டுதோறும் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி வருகிறது. அதனுடன் சேர்த்து பனங்கிழங்கு கட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் பனைத்தொழில் செய்வோரின் வாழ்வாதாரம் உயரும்" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய குழுவினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் லட்சுமிபதியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
    • 2 குழுக்களாக பிரிந்து சென்று மாவட்டம் முழுவதும் 24 இடங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த பெருமழை மற்றும் வெள்ள பாதிப்பு சேதங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய மத்திய ஆய்வுக்குழுவினர் இன்று தூத்துக்குடி வந்தனர்.

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் மத்திய குழுவினரின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    இதில் மத்திய ஆய்வு குழுவை சேர்ந்த கே.பி. சிங், ரங்கநாத் ஆதம், தங்கமணி, டாக்டர் பொன்னுச்சாமி, ராஜேஷ் திவாரி, பாலாஜி, விஜயகுமார் ஆகிய 7 பேர் கொண்ட குழு மற்றும் தமிழக கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர், வருவாய் நிர்வாக கூடுதல் கமிஷனர் பிரகாஷ், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தின்போது மத்திய ஆய்வு குழுவினர் பேசுகையில், தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகை தந்துள்ளோம்.

    தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு செல்ல உள்ளோம். இதில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், பெருஞ்சாணி, மணிமுத்தாறு உள்ளிட்ட அனைத்து அணை கட்டுகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.

    வெள்ளம் மற்றும் மழையின் காரணமாக விவசாய நிலங்கள், சாலைகள், மக்கள் வசிப்பிட பகுதிகள் எந்த அளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்ய உள்ளோம் என்று கூறினர்.

    ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து ஆய்வு குழுவினர் குழுக்களாக பிரிந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனை மற்றும் கோரம்பள்ளம் குளம், நெல்லை-தூத்துக்குடி சாலையில் உடைப்பு ஏற்பட்ட பகுதி உட்பட பல்வேறு பகுதிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

    • வெள்ளாளன்விளையில் இருந்து வட்டன்விளை செல்லும் பகுதியில் உள்ள தோட்டங்களில் தண்ணீர் தேங்கியது.
    • தோட்டங்களில் புகுந்த தண்ணீர் வடியாமல் கழுத்தளவுவிற்கு இன்னும் தேங்கி கிடக்கிறது.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 17, 18-ந் தேதிகளில் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மாவட்டத்தில் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தியது.

    மேலும் உடன்குடி அருகே உள்ள சடையநேரி குளத்தில் கரையில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக குளத்தில் உள்ள தண்ணீர் எல்லாம் அருகில் உள்ள கிராமத்தையும் தென்னை, பனை, வாழைத்தோட்டங்களிலும் புகுந்தது.

    குறிப்பாக உடன்குடி அருகே உள்ள வெள்ளாளன்விளையில் இருந்து வட்டன்விளை செல்லும் பகுதியில் உள்ள தோட்டங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் விவசாயிகள் தங்களது தோட்டத்திற்கு செல்ல முடியாமல் அவதிபட்டனர். சிலர் தற்காலிக படகு மூலம் தோட்டத்திற்கு சென்று பார்த்து வந்தனர். தண்ணீர் உடனடியாக வடிந்துவிடும் என்பதால் வாழைத்தார்களை வெட்டி விற்றால் வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.

    ஆனால் தோட்டங்களில் புகுந்த தண்ணீர் வடியாமல் கழுத்தளவுவிற்கு இன்னும் தேங்கி கிடக்கிறது. எனினும் விவசாயிகள் தண்ணீரில் நீந்திச்சென்று வாழைத்தார்களை வெட்டி எடுத்து வருகிறார்கள்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கிட்டத்தட்ட 25 நாட்களாக தண்ணீர் வடியாமல் தோட்டங்களில் தேங்கி கிடக்கிறது. கிராமம் என்பதால் யாரும் எங்களை கவனிக்கவில்லை. எனினும் வாழ்வாதாரத்திற்காக வாழைத்தார்களை தண்ணீரில் நீந்திச் சென்று வெட்டி எடுத்து வருகிறோம்.

    எனவே தோட்டங்களில் தேங்கி உள்ள தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×