என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தூத்துக்குடியில் மத்தியக்குழு இன்று மீண்டும் ஆய்வு
- மத்திய குழுவினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் லட்சுமிபதியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
- 2 குழுக்களாக பிரிந்து சென்று மாவட்டம் முழுவதும் 24 இடங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த பெருமழை மற்றும் வெள்ள பாதிப்பு சேதங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய மத்திய ஆய்வுக்குழுவினர் இன்று தூத்துக்குடி வந்தனர்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் மத்திய குழுவினரின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் மத்திய ஆய்வு குழுவை சேர்ந்த கே.பி. சிங், ரங்கநாத் ஆதம், தங்கமணி, டாக்டர் பொன்னுச்சாமி, ராஜேஷ் திவாரி, பாலாஜி, விஜயகுமார் ஆகிய 7 பேர் கொண்ட குழு மற்றும் தமிழக கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர், வருவாய் நிர்வாக கூடுதல் கமிஷனர் பிரகாஷ், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின்போது மத்திய ஆய்வு குழுவினர் பேசுகையில், தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகை தந்துள்ளோம்.
தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு செல்ல உள்ளோம். இதில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், பெருஞ்சாணி, மணிமுத்தாறு உள்ளிட்ட அனைத்து அணை கட்டுகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.
வெள்ளம் மற்றும் மழையின் காரணமாக விவசாய நிலங்கள், சாலைகள், மக்கள் வசிப்பிட பகுதிகள் எந்த அளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்ய உள்ளோம் என்று கூறினர்.
ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து ஆய்வு குழுவினர் குழுக்களாக பிரிந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனை மற்றும் கோரம்பள்ளம் குளம், நெல்லை-தூத்துக்குடி சாலையில் உடைப்பு ஏற்பட்ட பகுதி உட்பட பல்வேறு பகுதிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்