search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    2 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள்
    X

    2 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள்

    • கடலுக்கு மீனவர்கள் செல்லலாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
    • நாட்டுப்படகுகளில் மீனவர்கள் உற்சாகமாக மீன்பிடிக்க சென்றனர்.

    தூத்துக்குடி:

    வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதைத்தொடர்ந்து அனைத்து படகுகளும் கரையில் நிறுத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் அவர்கள் மீன்படிக்க செல்லவில்லை.

    இந்நிலையில் இன்று முதல் கடலுக்கு மீனவர்கள் செல்லலாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 2 நாட்களுக்கு பின்னர் இன்று அதிகாலை முதல் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அந்த வகையில் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 245 விசைப்படகுகளும் மாவட்டத்தில் உள்ள 200 விசைப்படகுகள் மற்றும் 5 ஆயிரம் நாட்டுப்படகுகளில் மீனவர்கள் உற்சாகமாக மீன்பிடிக்க சென்றனர்.

    Next Story
    ×