search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவியை கடத்திய வாலிபருக்கு வலைவீச்சு
    X

    கல்லூரி மாணவியை கடத்திய வாலிபருக்கு வலைவீச்சு

    • நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அந்த மாணவி திடீரென மாயமானார்.
    • இதுகுறித்து மாணவியின் தாய் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப்–பேட்டை சித்தர் கோவில் மெயின் ரோடு அருகே உள்ள பகுதிைய சேர்ந்த 17 வயது மாணவி தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அந்த மாணவி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்ததில் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 20) என்பவர் மாணவியை கடத்திச் சென்றது தெரியவந்தது.இதுகுறித்து மாணவியின் தாய் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை கடத்திய வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×