search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில் இறந்தவர் உடலை பிரேத பரிசோதனை செய்ய தாமதமானதால் உறவினர்கள் மறியல்
    X

    பாலக்கோடு அருகே மறியலில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    விபத்தில் இறந்தவர் உடலை பிரேத பரிசோதனை செய்ய தாமதமானதால் உறவினர்கள் மறியல்

    • தருமபுரி அருகே சாலைமறியல் நடந்தது.
    • அரசு மருத்துவமனையை கண்டித்து நடத்தினர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சித்திரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது60). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு சித்திரப்பட்டி பஸ் நிறுத்ததிலிருந்து சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது பாலக்கோட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்த நபர் கோவிந்தசாமி மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.

    இந்த நிலையில் அவரது உடலை நாளை காலை பிரேத பரிசோதனை செய்து தருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    ஆனால் நேற்று நண்பகல் வரை பிரேத பரிசோதனை செய்யவில்லை, மருத்துவ உதவியாளர் வரவில்லை, ஒரே ஒருவர் தான் உள்ளார். அவர் வந்தால் தான் பிரேத பரிசோதனை செய்ய முடியும். மருத்துவமனையில் போதிய ஆட்கள் இல்லை என தெரிவித்ததால் ஆத்திரமடைந்த கோவிந்த சாமியின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு உள்ள பைபாஸ் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த பாலக்கோடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமாதானம் பேசி கூட்டத்தை கலைத்தனர்.

    மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×