search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷம் குடித்த விவசாயி சாவு
    X

    விஷம் குடித்த விவசாயி சாவு

    • வீட்டில் தனியாக இருந்தபோது பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார்.
    • அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக ராமசாமி உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் சிடுவம்பள்ளி காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது70). விவசாயி.

    இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக ராமசாமி உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் ஏரியூர் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த என்ன காரணத்திற்காக? ராமசாமி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×