search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    5-வது முறையாக சாம்பியன்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கவர்னர் தமிழிசை வாழ்த்து
    X

    5-வது முறையாக சாம்பியன்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கவர்னர் தமிழிசை வாழ்த்து

    • 2023 ஐ.பி.எல். தொடரில் 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் அனைத்து வீரர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    தெலுங்கானா, புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    2023 ஐ.பி.எல். தொடரில் 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    வீரர் மகேந்திர சிங் டோனி தலைமையில் மிகச் சிறப்பாக விளையாடி குறிப்பாக நேற்றைய போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 6-ரன்கள் மற்றும் 4-ரன்கள் அடித்து வெற்றி பெற காரணமாக இருந்த வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அனைத்து வீரர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×