என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ராமாபுரத்தில் 17 வயது சிறுமி குழந்தை பெற்றார்- ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிய வாலிபர் கைது
- குடும்ப வறுமை காரணமாக சிறுமி காய்கறி கடைக்கு சென்று வேலை பார்த்தார்.
- சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் கேன்டீனில் வேலை பார்த்து வரும் அம்புரோஸ் என்பவர் காய்கறி வாங்க வந்தபோது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.
போரூர்:
சென்னை ராமாபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி தாயுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
சிறுமியின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென இறந்துவிட்டார். அவரது தாய் உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே இருந்து வருகிறார். இதையடுத்து குடும்ப வறுமை காரணமாக சிறுமி அதே பகுதியில் உள்ள காய்கறி கடைக்கு சென்று வேலை பார்த்தார்.
அப்போது அதே பகுதி சாந்தி நகரில் அறை எடுத்து தங்கி சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் கேன்டீனில் வேலை பார்த்து வரும் அம்புரோஸ் (வயது27) என்பவர் காய்கறி வாங்க வந்தபோது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த ஒரு வருடமாக அவர் சிறுமியுடன் நெருங்கி பழகி வந்தார். மேலும் பலமுறை ஆசைவார்த்தை கூறி சிறுமியை தனது அறைக்கு அழைத்து சென்று நெருக்கமாக இருந்தார்.
இதில் சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதுபற்றி அவரும், அவரது தாயும் வெளியில் யாரிடமும் சொல்லாமல் இருந்தனர். இந்த நிலையில் நேற்று போரூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இது தொடர்பாக அம்புரோஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அம்புரோசை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்