என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாங்குநேரி அருகே பஞ்சாயத்து தலைவி வீட்டில் ரூ.5 லட்சம் கொள்ளை
- பீரோவில் இருந்த ரூ.5 லட்சம் பணத்தை காணவில்லை. மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான எல்.இ.டி. டிவி உள்ளிட்ட பொருட்களும் திருட்டு போயிருந்தது.
- அதிர்ச்சி அடைந்த சாந்தகுமாரி, நாங்குநேரி போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் செல்வி விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் செல்லையா(வயது 62). இவரது மனைவி சாந்தகுமாரி(56).
செல்லையா தாசில்தாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சாந்தகுமாரி மறுகால்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளார். இவருக்கு நாங்குநேரி அருகே உள்ள தென்னிமலையில் தோட்டத்துடன் கூடிய பண்ணை வீடு உள்ளது.
நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் பண்ணை வீட்டுக்கு சென்ற செல்லையா அன்று இரவு வெகுநேரம் ஆகிவிட்டதால் அங்கேயே தங்கிவிட்டார். பின்னர் நேற்று தோட்டத்தில் இருந்து வீட்டுக்கு அனைவரும் திரும்பி உள்ளனர்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உடனே அனைவரும் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோவில் இருந்த ரூ.5 லட்சம் பணத்தை காணவில்லை. மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான எல்.இ.டி. டிவி உள்ளிட்ட பொருட்களும் திருட்டு போயிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தகுமாரி, நாங்குநேரி போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் செல்வி விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார். அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்