என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
3-வது நாளாக மீன்பிடி தொழிலுக்கு செல்லாத விசைப்படகுகள்
- தினமும் 1000 நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க சென்று வருகின்றன. இதன் மூலம் கிடைக்கும் மீன்கள் ராமேசுவரம் மீன் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாததால் மீன்களின் விலை உயர்ந்துள்ளது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக கடல் காற்று பலமாக வீசி வருகிறது. கடந்த 3 நாட்களாக காற்றின் வேகம் அதிகரித்து விட்டதால் நேற்று முன்தினம் முதல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் இருந்து சுமார் 2 ஆயிரம் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடி தொழிலிலுக்கு செல்லாமல் முடங்கி உள்ளனர்.
இதன் காரணமாக ஒரு நாளைக்கு ரூ. 1.50 கோடி வருமான இழப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த 2 நாட்களாக விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாததால் மொத்தம் ரூ. 3 கோடி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆழ்கடலில் தொடர்ந்து காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் விபத்து ஏற்பட்டுவிடக்கூடும் என்பதால் மீனவர்கள் விசைப்படகுகளில் சென்று மீன்பிடிப்பதை தவிர்த்து வருகின்றனர்.
இருந்தபோதிலும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். தினமும் 1000 நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க சென்று வருகின்றன. இதன் மூலம் கிடைக்கும் மீன்கள் ராமேசுவரம் மீன் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாததால் மீன்களின் விலை உயர்ந்துள்ளது. மேலும் மீன்வியாபாரிகளின் வருகையும் குறைந்துள்ளது.
ராமேசுவரம் பாம்பன் பாலம் வழியாக செல்லும் ரெயில் 15 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும். கடந்த 2 நாட்களாக கடல் காற்று பலமாக வீசுவதால் பாம்பன் பாலம் வழியாக செல்லும் ரெயில் 5 கி.மீ. வேகத்தில் தான் இயக்கப்பட்டது. ரெயில் வேகமாக செல்லாமல் ஊர்ந்து சென்றது. இதனால் பயணிகள் கடலின் அழகை பார்த்து ரசித்தனர்.
ராமேசுவரம் பாம்பன் பகுதியில் கடற்கரை ஓரத்தில் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன. கடல் காற்று காரணமாக இந்த தென்னை மரங்கள் தலைவிரித்து ஆடி வருகின்றன. இதனால் மரங்கள் முறிந்து சேதமாகி விழும் என்று அதன் உரிமையாளர்கள் கவலையடைந்து உள்ளனர்.
கடல் காற்று குறைந்தால் தான் தடையின்றி மீன்பிடி தொழிலில் ஈடுபட முடியும் என்பதால் மீனவர்களும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்