search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பள்ளி தலைமை ஆசிரியர் மகனிடம் ரூ.13 லட்சம் மோசடி
    X

    அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பள்ளி தலைமை ஆசிரியர் மகனிடம் ரூ.13 லட்சம் மோசடி

    • அருண் பிரசாந்த் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஆனந்த கிருஷ்ணனிடம் இருந்து ரூ.13 லட்சம் வாங்கியுள்ளார்.
    • தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள பட்லுர் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி. பள்ளி தலைமை ஆசிரியர். இவருடைய மகன் ஆனந்த கிருஷ்ணன். இவர் பி.இ மெக்கானிக்கல் முடித்த நிலையில் வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அருண் பிரசாந்த் (வயது45). இவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஆனந்த கிருஷ்ணனிடம் இருந்து ரூ.13 லட்சம் வாங்கியுள்ளார்.

    ஆனால் அரசு வேலை இதுவரை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றம் அடைந்தது தெரியவந்தது. வேலை வாங்கி தராத நிலையில் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் பணம் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

    இது குறித்து தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×