என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பள்ளி தலைமை ஆசிரியர் மகனிடம் ரூ.13 லட்சம் மோசடி
Byமாலை மலர்30 March 2023 9:56 AM GMT
- அருண் பிரசாந்த் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஆனந்த கிருஷ்ணனிடம் இருந்து ரூ.13 லட்சம் வாங்கியுள்ளார்.
- தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள பட்லுர் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி. பள்ளி தலைமை ஆசிரியர். இவருடைய மகன் ஆனந்த கிருஷ்ணன். இவர் பி.இ மெக்கானிக்கல் முடித்த நிலையில் வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அருண் பிரசாந்த் (வயது45). இவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஆனந்த கிருஷ்ணனிடம் இருந்து ரூ.13 லட்சம் வாங்கியுள்ளார்.
ஆனால் அரசு வேலை இதுவரை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றம் அடைந்தது தெரியவந்தது. வேலை வாங்கி தராத நிலையில் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் பணம் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இது குறித்து தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X