என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பிரதமர் மோடி நாளை வருகை- சமூக வலைதளங்கள் தீவிர கண்காணிப்பு
- பிரதமரின் வருகையை பயன்படுத்தி அசம்பாவிதங்கள் ஏற்படும் வகையிலான கருத்துக்களை யாராவது பதிவிடுகிறார்களா? என்பதை சைபர் கிரைம் குழுவினர் தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள்.
- சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நடைபெறும் நேரு ஸ்டேடியத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னை:
பிரதமர் மோடி நாளை மாலை சென்னை வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.
பிரதமரின் வருகையை தொடர்ந்து சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசார் சமூக வலைதளங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் அதே வேளையில் சமூக ஊடகங்களும் சில நேரங்களில் அச்சுறுத்தலாக மாறி விடுகிறது. இதனை கருத்தில் கொண்டே சமூக வலைதளங்களை போலீசார் தீவிரமாக கண்காணிக்க தொடங்கி உள்ளனர்.
பிரதமரின் வருகையை பயன்படுத்தி அசம்பாவிதங்கள் ஏற்படும் வகையிலான கருத்துக்களை யாராவது பதிவிடுகிறார்களா? என்பதை சைபர் கிரைம் குழுவினர் தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நடைபெறும் நேரு ஸ்டேடியத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவரிடம் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சில அமைப்பினர் செயல்படுவதாக கூறப்படுகிறதே? அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த கமிஷனர் சங்கர் ஜிவால், இது தொடர்பாக சமூக ஊடகங்களை கண்காணித்து வருகிறோம். அச்சுறுத்தும் வகையிலான பதிவுகளை யாராவது வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்