search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புளியங்குடியில் டீக்கடையில் தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவர் தற்கொலை
    X

    புளியங்குடியில் டீக்கடையில் தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவர் தற்கொலை

    • சதீசுக்கு கடந்த சில மாதங்களாகவே பள்ளிக்கு செல்வதற்கு விருப்பம் இல்லாமல் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • தனக்கு செல்போன் வேண்டும் என்று பெற்றோரிடம் சதீஷ் அடம்பிடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடியை அடுத்த டி.என்.புதுக்குடி ராமசாமி தென்-வடல் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் சதீஷ்(வயது 17).

    கருப்பசாமி தனது வீட்டின் அருகிலேயே டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். சதீஷ் அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இன்று காலை வழக்கம்போல் எழுந்து பல் துலக்கிய சதீஷ் டீக்கடைக்குள் சென்றுள்ளார்.

    அதன்பின்னர் வெகுநேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை கடைக்குள் சென்று பார்த்தபோது சேலையில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

    தகவல் அறிந்த புளியங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர் சதீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சதீசுக்கு கடந்த சில மாதங்களாகவே பள்ளிக்கு செல்வதற்கு விருப்பம் இல்லாமல் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தனக்கு செல்போன் வேண்டும் என்று பெற்றோரிடம் அவர் அடம்பிடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×