search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரவுடியை வெட்டி கொல்ல முயன்ற கும்பல்- ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
    X

    ரவுடியை வெட்டி கொல்ல முயன்ற கும்பல்- ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

    • பலத்த காயம் அடைந்த கமலக்கண்ணனுக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலை, மணியம்மன் நகரை சேர்ந்தவர் கமலக்கண்ணன்(32). ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

    நேற்று இரவு அவர், பெரம்பூர் தீட்டி தோட்டம் 4-வது தெருவில் நடந்து சென்றார். அப்போது ஆட்டோவில் கத்தி, அரிவாளுடன் வந்த மர்ம கும்பல் திடீரென கமலக்கண்ணனை வழிமறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கமலக்கண்ணன் அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார்.

    ஆனாலும் விரட்டி சென்ற கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதில் கை, முகம், மார்பில் பலத்த காயம் அடைந்த கமலக்கண்ணனுக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திரு.வி.க நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×