என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஜெயலலிதா சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை- வரவேற்பதில் ஆதரவாளர்கள் இடையே மோதல்
- மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் அன்னதானம் வழங்கினார்.
- நிகழ்ச்சியில் மூத்த நிர்வாகிகள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் மாவட்ட செயலாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்தார்.
காலை 10.15 மணிக்கு அங்கு வந்த அவரை அவரது ஆதரவாளர்கள் அழைத்து சென்றனர். பின்னர் ஜெயலலிதா சிலைக்கு ஓ.பன்னீர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சிலைக்கு கீழ் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கும் மலர் தூவினார்.
இந்த நிகழ்ச்சியில் மூத்த நிர்வாகிகள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் மாவட்ட செயலாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் அன்னதானம் வழங்கினார்.
முன்னதாக ஓ.பன்னீர் செல்வத்தை வரவேற்க உயர்கல்வி மன்ற வளாகத்தின் முன்பு ஓ.பி.எஸ். தரப்பு செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் கே.ஜி.இளங்கோவன் தொண்டர்களுடன் காமராஜர் சாலையில் காத்து நின்றனர்.
தென்சென்னை மாவட்ட செயலாளர் சதீஷ் என்பவர், ஆதரவாளர்களுடன் நின்ற இளங்கோவனை போலீசார் மூலம் உள்ளே போகச் சொன்னதாக தெரிகிறது. அதற்கு அவர்கள் நாங்கள் சாலையில் நிற்போம். எங்களை எப்படி உள்ளே போக சொல்வீர்கள் என்று வாய் தகராறில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. அப்போது கே.ஜி.இளங்கோவன் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்... இப்படியே செய்தால் ஓ.பி. எஸ்.சுக்கு தொண்டர்களே இருக்க மாட்டார்கள் என எச்சரிக்கும் தோனியில் அக்கூட்டத்தில் பேசி உள்ளார்.
இது அங்கு ஓ.பன்னீர் செல்வத்தை வரவேற்க நின்ற மூத்த நிர்வாகிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்