என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சென்னை ஜாம்பஜாரில் வாலிபர் குத்தி கொலை
- பலத்த காயமடைந்த ராமு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
- போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை திருவல்லிக்கேணி தேவராஜ் தெருவை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். இவருக்கு 5 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு சவுந்தரராஜன் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் இவரது கடைசி மகனான ராமு என்பவர் திருமணம் செய்து கொள்ளாமல் வீட்டில் தனியாக வசித்துள்ளார். சொந்த வீடு இருக்கும் காரணத்தால் அதில் வரும் வாடகையை வைத்து எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் தூங்கிக் கொண்டிருந்த ராமுவை மது பாட்டில் மற்றும் ஆயுதங்களால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் முகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காயமடைந்த ராமு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜாம்பஜார் போலீசார் கொலை செய்யப்பட்ட ராமுவின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ராமு என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார். குடும்ப பிரச்சினையா? அல்லது முன்விரோதம் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்