search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் தொகுதியில் சண்முகம் என்ற பெயரில் 9 பேர் போட்டி
    X

    வேலூர் தொகுதியில் சண்முகம் என்ற பெயரில் 9 பேர் போட்டி

    • பா.ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் மனு ஏற்கப்பட்டிருக்கிறது.
    • அ.தி.மு.க. வேட்பாளர் பசுபதி பெயரிலும் சுயேட்சையாக இன்னொரு பசுபதி போட்டியிடுகிறார்.

    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.

    வேட்பு மனு பரிசீலனையின் போது சண்முகம், சண்முகவேலு, சண்முகசுந்தரம் என்ற பெயரிலேயே மொத்தமாக 10 பேர் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் 9 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது தெரியவந்தது.

    பா.ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் மனு ஏற்கப்பட்டிருக்கிறது. அவரைத் தவிர்த்து மற்ற அனைவருமே சுயேட்சை வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

    சத்துவாச்சாரியைச் சேர்ந்த சண்முகவேலு என்பவரின் மனு ஏற்கப்பட்டிருக்கிறது. வாணியம்பாடி அம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.சி.சண்முகம் என்பவரும் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். தந்தை பெயர் சென்னப்பன் எனக் குறிப்பிட்டிருக்கிறார். இவரின் மனு ஏற்கப்பட்டிருக்கிறது.

    சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த ஜி.சண்முகம் என்பவர் 2 மனு தாக்கல் செய்திருந்தார். அதில் ஒன்று நிராகரிக்கப்பட்டு, இன்னொன்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதேபோல, வாணியம்பாடி கிரிசமுத்திரத்தைச் சேர்ந்த பி.சண்முகம், வேலூர் அருகே உள்ள திருவலத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம், வேலூர் சலவன்பேட்டையைச் சேர்ந்த கே.சண்முகம், வேலூர் விருப்பாட்சி புரத்தைச் சேர்ந்த ஜி.சண்முகம், வாணியம்பாடி புதூரைச் சேர்ந்த எம்.பி.சண்முகம் ஆகியோரின் மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

    அதேபோல், அ.தி.மு.க. வேட்பாளர் பசுபதி பெயரிலும் சுயேட்சையாக இன்னொரு பசுபதி போட்டியிடுகிறார்.

    Next Story
    ×