என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை அருகே என்ஜினீயர் வீட்டில் 14 பவுன் நகை-பணம் கொள்ளை
- கடந்த 11-ந்தேதி ரதி வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றார்.
- பின்னர் நேற்று மாலை வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
நெல்லை:
நெல்லை பேட்டை திருமங்கைநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் தினேஷ்பாபு. இவர் சென்னையில் தங்கியிருந்து என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரதி (வயது34).
கடந்த 11-ந்தேதி ரதி வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று மாலை வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 14 பவுன் தங்கநகைகள், ரூ. 20 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. இதன் மதிப்பு ரூ. 6 லட்சம் ஆகும்.
இது தொடர்பாக அவர் பேட்டை போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்வையிட்டனர். அப்போது வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்