search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்பெண்ணை ஆற்றில் ஓடும் உபரி நீரை   கிராம ஏரிகளுக்கு கொண்டு செல்ல  வேண்டும்-   விவசாயிகள் கோரிக்கை
    X

    தென் பெண்ணை ஆற்றில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து ஓடும் காட்சி.

    தென்பெண்ணை ஆற்றில் ஓடும் உபரி நீரை கிராம ஏரிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை

    • தென் பெண்ணை ஆற்றில் ஆர்ப்பரித்து வெள்ளத்தால் தென் பெண்ணை ஆறு கடல் போல் காட்சி அளிக்கிறது.
    • பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆவலுடன் பார்த்து செல்கின்றனர்.

    மொரப்பூர்,

    கர்நாடகா மற்றும் தமிழகத்தில் பல பகுதிகளில் சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென் பெண்ணை ஆற்றில் ஆர்ப்பரித்து வெள்ளத்தால் தென் பெண்ணை ஆறு கடல் போல் காட்சி அளிக்கிறது.

    இந்த கண் கொள்ளா காட்சியை இருமத்தூர், திப்பம்பட்டி, கம்பைநல்லூர், கொங்கரபட்டி, கெலவள்ளி, மஞ்சமேடு, அரசம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆவலுடன் பார்த்து செல்கின்றனர்.

    இது போன்று தண்ணீர் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தற்போது வருவதால் அப்பகுதியை சேர்ந்த சுற்றுவட்டார கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அதே சமயம் இது போன்ற மழைக்கால உபரி நீரை அருகாமையில் உள்ள கிராம ஏரிகளுக்கு கொண்டு சென்றால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×