search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடி, மெஞ்ஞானபுரத்தில் தி.மு.க. சார்பில் கோடை கால நீர்- மோர் பந்தல்கள்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
    X

    உடன்குடியில் நீர், மோர் பந்தலை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்த காட்சி.

    உடன்குடி, மெஞ்ஞானபுரத்தில் தி.மு.க. சார்பில் கோடை கால நீர்- மோர் பந்தல்கள்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

    • தொடக்க விழாவிற்கு மால் ராஜேஷ் தலைமை வகித்தார்.
    • மெஞ்ஞானபுரம் பஜாரில் இலவச நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது.

    உடன்குடி:

    முதல்-அமைச்சரும், தி.மு.க., தலைவருமான மு.க.ஸ்டாலின் கோடை காலத்தில் பொதுமக்களின் நலன் கருதி தமிழகம் முழுவதும் தி.மு.க., சார்பில் நீர், மோர் பந்தல் அமைக்க வேண்டும் என அறிவித்துள்ளார். அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும், தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனையின் பேரில் உடன்குடி பேரூர் தி.மு.க., செயலாளரும், உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவருமான மால் ராஜேஷ் ஏற்பாட்டில் உடன்குடி மெயின் பஜாரில் நீர், மோர் பந்தல் தொடக்க விழாவிற்கு மால் ராஜேஷ் தலைமை வகித்தார்.

    பேரூராட்சி கவுன் சிலர்கள் ஜாண்பாஸ்கர், சரஸ்வதி பங்காளன், பஷீர், பிரதீப் கண்ணன், ஆபீத், மும்தாஜ், சபனா, அன்பு ராணி ஆகியோர் முன்னி லை வகித்தனர். நீர், மோர் பந்தலை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்து பொது மக்களுக்கு இளநீர், தர்பூசணி, மோர் வழங்கினார்.

    இதில் மூக்காணி கூட்டுறவு சங்க தலைவர் உமரி சங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணா ச்சலம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, மாநில மகளிர் பிரச்சார குழு செயலாளர் ஜெஸி பொன் ராணி, உடன்குடி பேரூர் வார்டு செயலாளர்கள் அன்வர் சலீம், சித்திரை செல்வன், சலீம், பஷீர், முருகேசன், பாலசிங், ஆனந்த், ஆட்டோ கணேசன், சாம்நேஸ், ராஜேந்திரன், முத்துப் பாண்டி, கணேஷ், நாராயணன், மாவட்ட பிரதிநிதிகள் ஹீபர் மோசஸ் ஸ்மைல்சன், முபாரக் மற்றும் பேரூர் நிர்வாகிகள் அப்துல் ரசாக், தங்கம், திரவியம், மேகநாதன், பிரவீனா, ஹரி, ராஜ்குமார், இஸ்மாயில் இசக்கிமுத்து, கணேசன், நிர்மல்சிங், இசக்கிப்பாண்டி, ஸ்டெல்லா, செண்பகவள்ளி, கிளாட்வின், பைசுல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மெஞ்ஞானபுரம்

    உடன்குடி மேற்கு ஒன்றியம் மெஞ்ஞானபுரம் பஜாரில் கோடைகால இலவச நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. தமிழக மீன்வளம், மீனவர்நலம் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு இலவச நீர், மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழரசம், நீர், மோர், தர்பூசணி, இளநீர் ஆகியவற்றை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ஜெசி பொன்ராணி, மாவட்ட பிரதிநிதிராஜா பிரபு, கிளை செயலாளர்கள் ஜெரால்டு, ஜெயக்குமார், சுடலைக்கண், மாணவர் அணி முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் செய்திருந்தார்.

    Next Story
    ×