search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் கழிவுநீர் குளத்தில் வெளியான கரும்புகை
    X

    குளத்திலிருந்து வெளியே வந்த புகையை படத்தில் காணலாம்.

    திண்டுக்கல்லில் கழிவுநீர் குளத்தில் வெளியான கரும்புகை

    • பலர் குப்பைகளை கொட்டி எரித்து வருவதால் நச்சப்புகை ஏற்படுகிறது.
    • புகையை காட்டிலும் சற்று மாறுபட்டதாக இருந்ததால் ஏதேனும் வேதிப்பொருள் கலக்கப்பட்டிருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் எம்.வி.எம். கல்லூரி ரெயில்வே கேட் அருகே பயன்பாடற்ற இடம் உள்ளது. இங்கு சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பலர் குப்பைகளை கொட்டி எரித்து வருகின்றனர். மேலும் ஒர்க்‌ஷாப்புகளில் இருந்து ஆயில் உள்ளிட்ட கழிவு பொருட்களும் கொட்டப்படுகின்றன.

    மாசடைந்து வந்த இந்த இடத்தில் இன்று பகல் பொழுதில் கரும்புகை வெளிப்பட்டது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். தீயினால் வைக்கப்பட்ட புகையை காட்டிலும் சற்று மாறுபட்டதாக இருந்ததால் ஏதேனும் வேதிப்பொருள் கலக்கப்பட்டிருக்குேமா என்ற அச்சம் ஏற்பட்டது.

    தொடர்ந்து இதேபோல் நச்சுக்கழிவுகள் இப்பகுதியில் கொட்டப்படுவதால் நிலத்தடி நீர் மாசுபடுவதோடு சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×