search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவிலில்  யோகா தின நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் பங்கேற்பு
    X

    நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் யோகாசனம் செய்தபோது எடுத்தபடம்.

    சங்கரன்கோவிலில் யோகா தின நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் பங்கேற்பு

    • மாணவ- மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
    • சங்கரநாராயண சுவாமி கோவில் முன்பு யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் முன்பு பதஞ்சலி யோகா அறக்கட்டளை சார்பில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு யோகா மாஸ்டர் ஜெயராம் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் மற்றும் பதஞ்சலி யோகா மையத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு யோகாசனம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    இதில் மாணிக்கம், சுந்தரராஜ், சுப்புரமணியன், கருப்பசாமி, ராமு, வெங்கட்ராமன், பெப்சி முருகன், ராகவன் மற்றும் உறுப்பினர்கள், பி.ஜே.பி. மாவட்ட பொது செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×