search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில் மூளைச்சாவு அடைந்த  தேனி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்
    X

    மூளைச்சாவு அடைந்த சக்திகுமார்

    விபத்தில் மூளைச்சாவு அடைந்த தேனி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்

    • விபத்தில் மூளைச்சாவு அடைந்த கம்பம் மாணவரின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம் செய்யப்பட்டது.
    • சாலைவிதிகளை முறையாக பின்பற்றி சென்றால் விபத்துகளை தவிர்ப்பதோடு உயிரிழப்புகளையும் தவிர்க்கலாம்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் ஆதிசக்திவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்தரசு. ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மகன் சக்திகுமார்(19). உத்தமபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்றுமுன்தினம் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்ற சக்திகுமார் விபத்தில் சிக்கினார்.

    மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனைதொடர்ந்து டாக்டர்கள் பரிந்துரையின் பேரில் மாணவரின் பெற்றோர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.

    அதன்படி சக்திகுமாரின் இதயம், நுரையீரல் ஆகியவை சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கும், கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரிக்கும், மற்ெறாரு சிறுநீரகம் கோவை கே.எம்.சி.ஏ ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

    பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் ஸ்டைலாக வருவதையும், விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் பைக்ரேஸ் போன்ற சாகசங்களில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது. நண்பர்களுடன் ஒன்றாக செல்லும்போது ஆபத்தை உணராமல் அதிவேகத்தில் செல்வதால் விபத்தில் சிக்கி உயிரிழந்து விடுகின்றனர்.

    ெபற்றோர்களும் தங்கள் குழந்தைக்கு நேரும் ஆபத்தை உணராமல் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் காலத்திலேயே விதவிதமான மோட்டார் சைக்கிளை வாங்கி கொடுத்து விடுகின்றனர். எனவே இதுபோன்ற மாணவர்கள் சாலைவிதிகளை முறையாக பின்பற்றி சென்றால் விபத்துகளை தவிர்ப்பதோடு உயிரிழப்புகளையும் தவிர்க்கலாம்.

    Next Story
    ×