search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல் உறுப்புகள் தானம்"

    • இதயம் கொல்லத்தில் 14 வயது சிறுவனுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.
    • ஏழை குழந்தைகளை சிலரை படிக்க வைத்து சமூக சேவகராக திகழ்ந்தார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் புதுக்கடைகீழ்குளம் அருகே உள்ள சரல்விளையை சேர்ந்தவர் செல்வின் சேகர் (வயது 36). இவர் மருத்துவம் சார்ந்த முது நிலை பட்டப்படிப்பு படித்துள்ளார். கருங்கல், புத்தன் துறை ஆகிய பகுதிகளில் மருந்தகம் வைத்து நடத்தி வந்தார். இவர் கீதா என்ற பெண்ணை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்களும்,

    ஒரு மகனும் உண்டு. செல்வின் சேகர் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்தார். அத்துடன் ஆதரவற்று சுற்றித்திரியும் பெரியோர்களுக்கு உணவுகள் அளித்தும், காப்பகத்தில் சேர்த்து அவர்களுக்கு மாத செலவு கட்டணமும் வழங்கியும் வந்துள்ளார். அத்துடன் ஏழை குழந்தைகளை சிலரை படிக்க வைத்து சமூக சேவகராக திகழ்ந்தார்.

    இப்படி எண்ணற்ற உதவிகளை செய்து வந்த செல்வின் சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்தபோது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை உறவினர்கள் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஆனாலும் அவரது உடல் நிலை மோசமானது. தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அப்போது அவரது மூளையில் உள்ள ரத்தநாளங்களில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. அவரை காப்பாற்றும் நடவடிக்கையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஒரு கட்டத்தில் உடல் நிலை மிகவும் மோசமாகி கோமா நிலைக்கு சென்றார். பின்னர் மூளைச்சாவு ஏற்பட்டது.

    செல்வின் உயிருடன் இருக்கும் போதே, தான் இறந்த பின்பு தனது உடல் "உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என மனைவியிடம் கூறியிருந்தார். அதன்படி உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன் வந்து ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் கூறினர்.

    இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கண்கள், கல்லீரல், இதயம், நுரையீரல் உள்ளிட்ட 7 உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

    அவரது இதயம் கொல்லத்தில் 14 வயது சிறுவனுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக இதயத்தை திருவனந்தபுரத்தில் இருந்து கொல்லத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு சென்று அந்த சிறுவனுக்கு பொருத்தப்பட்டது. மீதமுள்ள 6 உறுப்புகளும் 6 பேருக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று அவரது உடல் சொந்த ஊரானாக் மாவட்டம் சரல்வி பகுதிக்கு ஆம்புலன்ஸ் மூலம்-கொண்டு வரப்பட்டது. பின்னர் அவரது உடல் வீட்டில் ல்! உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி டீன் பிரின்ஸ் பயஸ் மற்றும் தாசில்தார்கள், கிராம நிர்வாகிகள் உள்பட 5 அரசு அதிகாரிகள் பலரும் நேரில் சென்று உட லுக்கு அரசு மரியாதை செலுத்தினர். மேலும் செல்வின் சேகர் உடலுக்கு உறவினர்கள், ஊர்மக்கள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பலர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

    • நடுநாலுமூலைக்கிணறு பகுதியில் சென்ற போது மாடு குறுக்கே வந்துள்ளது.
    • நிலைதடுமாறிய சதீஷ்குமார் சாலையில் கீழே விழுந்தார்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கீழநாலுமூலைக்கிணறு வடக்கு தெருவை சேர்ந்த தங்கபெருமாள் மகன் சதீஷ் (வயது33). இவர் பணிக்கநாடார் குடியிருப்பில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 6 மாத ஆண்குழந்தை உள்ளது.

    சதீஷ்குமார் பள்ளிக்கு, பள்ளி வாகனத்தில் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் பள்ளிக்குச் சென்றுள்ளார். வேலை முடிந்த பின்னர் பரமன்குறிச்சி வழியாக மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி சென்றார்.

    அவர் நடுநாலுமூலைக்கிணறு பகுதியில் சென்ற போது மாடு குறுக்கே வந்துள்ளது. அப்போது நிலைதடுமாறிய சதீஷ்குமார் சாலையில் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சாலை விபத்தில் தலையில் பலத்த காயமடைந்ததால் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மூளை செயலிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் சதீஷின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முடிவு செய்தனர். நெல்லை மருத்துவமனையில் அவரது இதயம், கண்கள், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. அவரது இதயம் மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு எடுத்து செல்லப்பட்டது.

    தமிழ்நாடு அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல் உறுப்புகள் தானத்தை வலியுறுத்தி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உடல் உறுப்புகள் தானம் செய்பவர்கள் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் தற்போது உடல் உறுப்புகள் தானம் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆசிரியை மஞ்சுளாவின் உடல் கொண்டு செல்லப்பட்டது.
    • இதயம், சிறுநீரகம், கண் மற்றும் தோல் உள்ளிட்ட உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.

    பெருந்துறை:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே குச்சிபாளையம் அடுத்த வெள்ளக்கல்காடு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மனைவி மஞ்சுளா (52). இவர் பள்ளிபாளையம் அருகே உள்ள கோவிந்தம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ஆசிரியை மஞ்சுளா தனது மொபட்டில் குச்சி பாளையத்தில் இருந்து கோவிந்தம்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட சாலை விபத்தில் மஞ்சுளாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு ஆசிரியை மஞ்சுளா மூளை சாவு அடைந்தார்.

    இதையடுத்து அவரது குடும்பத்தினர் மஞ்சுளாவின் உடல் பாகங்களை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அளிப்பதாக விருப்பம் தெரிவித்தனர். அதன் பேரில் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து இன்று ஆசிரியை மஞ்சுளாவின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது. அவரது இதயம், சிறுநீரகம், கண் மற்றும் தோல் உள்ளிட்ட உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.

    இதையடுத்து அவரது உடலுக்கு பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் வள்ளி, பணியாற்றும் மருத்துவர்கள், ஊழியர்கள், ஆசிரியரின் உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஆசிரியை மஞ்சுளாவின் உடல் அவரது உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

    • கிருஷ்ணகுமார் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்.
    • கிருஷ்ணகுமார் உடலில் இருந்த 2 சிறுநீரகம், கல்லீரல், கணையம் என 4 உறுப்புகள் தானமாக பெறப்பட்டு உடனடியாக அது மற்ற 4 பேருக்கு பொருத்தப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கஞ்சமநாதன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். 34 வயதாகும் இவர் விவசாயம் செய்து வருகிறார்.

    கடந்த 17-ந் தேதி இரவு இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது இருசக்கர வாகனத்தின் டயர் வெடித்து அருகில் உள்ள மின்கம்பத்தில் மோதி கிருஷ்ணகுமார் காயம் அடைந்தார். தலையில் படுகாயம் அடைந்த கிருஷ்ணகுமார் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்.

    அங்கு அவருக்கு தலையில் அதிக அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்த நிலையில் கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகும் சுயநினைவு திரும்பாத நிலையில் இவர் மூளை சாவு அடைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்து விட்டனர். இதனால் கிருஷ்ணகுமார் புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கும் டாக்டர்கள் இவர் மூளை சாவு அடைந்து விட்டதை உறுதி செய்தனர்.

    இதனால் கிருஷ்ண குமார் பிழைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை அறிந்த கிருஷ்ண குமார் குடும்பத்தினர் நேற்று உடல் உறுப்பு தானம் செய்வதற்கு முன் வந்தனர். இதனையடுத்து கிருஷ்ணகுமார் உடலில் இருந்த 2 சிறுநீரகம், கல்லீரல், கணையம் என 4 உறுப்புகள் தானமாக பெறப்பட்டு உடனடியாக அது மற்ற 4 பேருக்கு பொருத்தப்பட்டது. இதனையடுத்து கிருஷ்ண குமாரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவரது உடல் கஞ்சமநாதன் பேட்டை கிராமத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசு சமீபத்தில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட பிறகு கடலூர் மாவட்டத்தில் உடல் உறுப்பை தானம் செய்த முதல் நபராக இவர் உள்ளார். இவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு மரியாதையுடன் கிருஷ்ண குமார் உடல் தகனம் செய்யப்பட உள்ளது. சிறிய கிராமத்தில் இருக்கும் விவசாயி அளவிற்கு உடல் உடல் உறுப்பு தானம் செய்வது சென்றடைந்து இருப்பதால் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உடல் உறுப்பு தானம் செய்த கிருஷ்ண குமாருக்கு 8 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ள நிலையில் அவரது குடும்பத்திற்கு அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

    • சிகிச்சையின் போது சண்முகத்துரை மூளைச்சாவு அடைந்து விட்டார்.
    • சண்முகத்துரையின் உடலுக்கு சங்கரன்கோவில், ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ளார் தென்காசி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி சண்முகத்துரை (வயது 52). இவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் நேற்றுமுன்தினம் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் அனும திக்கப்பட்டு சிகிச்சையின் போது மூளைச்சாவு அடைந்து விட்டார். அவரது நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் கண்கள் ஆகியவற்றை அவரது குடும்பத்தினர் உறுப்பு தானம் செய்துள்ளனர். மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட சண்முகத்துரையின் உடலுக்கு நேற்று மாலை, அவரது சொந்த ஊரான உள்ளார் கிராமத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சங்கரன்கோவில், ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது சிவகிரி தாசில்தார் ஆனந்த், வருவாய் ஆய்வாளர் சுந்தரி, கிராம நிர்வாக அலுவலர் வீரசேகரன், சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு மூளைச்சாவு அடைந்தார்.
    • கல்லீரல் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா உள்ளார் கிராமம்- தென்காசி மெயின்ரோட்டை சேர்ந்தவர் வெள்ளதுரை. இவரது மகன் சண்முக துரை(வயது 52). இவர் சம்ப வத்தன்று விபத்து ஒன்றில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

    பின்னர் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு மூளைச்சாவு அடைந்தார்.

    இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன்வந்தனர். தொடர்ந்து இன்று காலை அவரது உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அதன்படி விபத்தில் உயிரிழந்த சண்முகதுரை யின் நுரையீரல் சென்னை காவேரி மருத்துவ மனைக்கும், கல்லீரல் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

    மேலும், ஒரு சிறுநீரகம் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரிக்கும், மற்றொரு சிறுநீரகம் மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கும், கருவிழிகள் நெல்லை அரசு மருத்துக்கல்லூரிக்கும் தானமாக வழங்கப்பட்டது.

    தொடர்ந்து அரசின் வழிகாட்டுதலின்படி, உடல் உறுப்புகளை தானம் வழங்கிய சண்முகத்துரையின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதி பாலன், மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    • வடிவேல் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.
    • அமைச்சர் மா.சுப்பிரமணியன் மூளைச்சாவு அடைந்த வடிவேல் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் காந்திநகர் காலனியைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது 44). இவர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் முதுநிலை ஆய்வாளராக பணிபுரிந்தார். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளராகவும் உள்ளார். இவரது மனைவி பட்டு லெட்சுமி (38). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். வடிவேல் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 23-ந் தேதி வடிவேல் அலுவலக பணிகளை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்.

    சீலையம்பட்டி அருகே வந்தபோது சாலையின் குறுக்கே வந்த மாடு அவரது மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் தவறி கீழே விழுந்த வடிவேல் தலை, காது, மூக்கு பகுதியில் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கிருந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் வடிவேலின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அதன்படி மதுரையில் அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. இதனைத் தொடர்ந்து இன்று காலை 11 மணியளவில் அவரது சொந்த ஊரில் வடிவேல் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    உடல் உறுப்புகள் தானம் செய்பவர்களின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்த வடிவேலின் உடல் இன்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தேனி மாவட்டத்துக்கு வருகை தந்தார். அவர் மூளைச்சாவு அடைந்த வடிவேல் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்கரே, கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்குப் பின் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்த நபரின் உடல் முதன் முறையாக அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுவது சின்னமனூரில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பைக்கில் இருந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை சிப்காட் அடுத்த தகர குப்பம் கிராமத்தை சேர்ந்த ராபர்ட் மனைவி ஜெபக்குமாரி (வயது 33) இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    ராபர்ட்டும், ஜெபகுமாரியும் தனியார் தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ராபர்ட் மற்றும் ஜெபக்குமாரி ஆகியோர் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பைக்கில் வந்தனர்.

    பொன்னை சாலையில் உள்ள அணைக்கட்டு சர்ச் அருகே வந்தபோது ஜெபகுமாரி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு தலையில் பலத்த காயமடைந்தார். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெபக்குமாரி நேற்று இரவு மூளைச்சாவு அடைந்தார்.

    இதை தொடர்ந்து ஜெபக்குமாரியின் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வந்து தானம் வழங்கியுள்ளனர்.

    விபத்து தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடல் உறுப்புகள் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.
    • விருதுநகர் மாவட்டத்தில் கண்தானம் செய்வதற்கு 75985 20007 என்ற சிறப்பு எண்ணையும் அறிமுகப் படுத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் விருதுநகர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கமும் இணைந்து 38-வது தேசிய கண் தான இருவார விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் கண்தானம் செய்த 30 குடும்பங்களுக்கு பாரட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். மேலும் கண்தானத்திற்கு சிறப்பாக செயல்பட்ட தற்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சங்குமணிக்கு, பார்வை யிழப்பு தடுப்பு சங்க மாவட்ட திட்டமேலாளர் பொன்னுசாமி, கண் மருத்துவத்துறைத்தலைவர் பாரதிராஜன், சட்டம் சார்ந்த மருத்துவத்துறை தலைவர் சீதாலட்சுமி ஆகிேயாருக்கு நினைவு நினைவு பரிசு வழங்கினார்.

    விருதுநகர் மாவட்டத்தில் கண்தானம் செய்வதற்கு 75985 20007 என்ற சிறப்பு எண்ணையும் அறிமுகப் படுத்தினார்.

    பின்னர் அவர் பேசிய தாவது:-

    கருவிழி கண் தானம் மட்டுமல்லாமல் நம் உடலின் மிகமுக்கியமான பகுதிக ளான சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல்கள் போன்ற உறுப்புகளையும் தானம் அளிக்கலாம். இந்தியாவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதலிடம் வைக்கிறது. நுரையீரல், சிறுநீரகம், கண்கள் போன்ற உடல் உறுப்புகளை சரியான நேரத்தில் தேவைப்படு வோருக்கு மாற்றம் செய்யும் போது, அவரது வாழ்க்கை யையும், உயிரையும் காப்பாற்ற முடிகிறது. எனவே இது குறித்த விழிப்புணர்வு மிக அவசியம்.

    பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்து வதன் மூலமாக ஒருவர் இறந்த பிறகு அவருடைய உடல் உறுப்புகளை தான மாக வழங்குவது பல உயிர்களை காப்பாற்று வதற்கான வாய்ப்பாக அமைகிறது என்பதை அறிந்து கொள்ள செய்ய முடியும்.

    இந்த நிகழ்ச்சியில் அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குநர் வெங்கடேஷ் பிரஜ்னா, அரவிந்த் கண் மருத்துவமனை கண் வங்கி மேலாளர் சரவணன், அரசு மருத்துவர்கள், கண் தானம் செய்த குடும்பத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மோட்டார் சைக்கிளை ரஞ்சித் ஓட்டினார். பின்னால் சந்தோஷ் அமர்ந்திருந்தார்.
    • காயம் அடைந்த சந்தோசை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, அகரமேல் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரின் மகன் சந்தோஷ் (23), லேத் மெஷின் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இவரது நண்பர் ரஞ்சித். இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    மோட்டார் சைக்கிளை ரஞ்சித் ஓட்டினார். பின்னால் சந்தோஷ் அமர்ந்திருந்தார். பூந்தமல்லி - பெங்களூரு நெடுஞ்சாலை, பூந்தமல்லி அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது ரஞ்சித் ஓட்டி சென்ற வாகனம் மோதியதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் சந்தோசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து காயம் அடைந்த சந்தோசை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ் நேற்று இரவு மூளை சாவு அடைந்தார். இதையடுத்து அவரது பெற்றோர் சந்தோசின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த நிலையில் இறந்து போன சந்தோசின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

    இச்சம்பவம் குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சாம்பசிவன் இ.சி.ஆர். சாலையை கடக்கும்போது எதிரில் வந்த மினி லாரி எதிர்பாராத விதமாக சைக்கிள் மீது மோதியது.
    • தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் வழங்கிய மாணவனின் பெற்றோர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கீழ்பேட்டை யை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 42). இவருடைய மனைவி சத்யா (38). இந்த தம்பதியினரின் மகன் சாம்பசிவன் (வயது 12). இவர் அனுமந்தையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் இவர் கடந்த 14-ந் தேதி தனது வீட்டிலிருந்து சைக்கிளில் சென்றார். சாம்பசிவன் இ.சி.ஆர். சாலையை கடக்கும்போது எதிரில் வந்த மினி லாரி எதிர்பாராத விதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மாணவன் சாம்பசிவனை அவரது பெற்றோர் மரக்காணத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இங்கு அவருக்கு டாக்டர்கள் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். இதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக புதுவையில் உள்ள ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு மாணவன் சாம்பசிவனின் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் இவர் மூளைச்சாவு அடைந்து விட்டார். இதனால் இவர் உயிர் பிழைக்க முடியாது எனக் கூறினர். இதனால் மனமுடைந்த அவரின் பெற்றோர் தனது மகன் உயிரிழந்தாலும், அவரது உடல் உறுப்புகளை பெற்று பலர் உயிர் பிழைக்கலாம் என கருதி தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து மூளை சாவடைந்த மாணவன் சாம்பசிவனை ஆம்புலன்ஸ் மூலம் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் இருந்து சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பாதுகாப்பான முறையில் அறுவை சிகிச்சைகள் செய்து தேவையான உடல் உறுப்புகளை எடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் 9 பேருக்கு பொருத்தப்படுவதாகவும் கூறி உள்ளனர்.

    இதனை கேட்ட மாணவனின் பெற்றோர் தனது மகன் உயிர் இழந்து அவரது உடல் மறைந்தாலும் அவரது உடல் உறுப்புகளை தானமாக பெற்று உயிர் பிழைத்தவர்களை பார்க்கும்பொழுது தன் மகன் உயிரோடு இருக்கும் நினைவு உண்டாகும் என கூறுகின்றனர். தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் வழங்கிய மாணவனின் பெற்றோர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர்.

    • அவரது மனைவி தனது கணவரின் உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்வதாக தெரிவித்தார்.
    • விடிய, விடிய செந்தில்குமாரின் உடலில் உள்ள உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி அருகே மணியம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது45). தனியார் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ஸ்ரீ நிகேஷ் (14), கவின் நிலவன் (8), இரண்டு மகன்களும் உள்ளனர்.

    செந்தில்குமார் கடந்த புதன்கிழமை பள்ளி முடித்து விட்டு மாலை வீட்டிற்கு வந்த போது விபத்தில் இருசக்கர வாகன மோதி படுகாயம் அடைந்துள்ளார்.

    அவரை உறவினர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று அவருக்கு மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    மேலும் மருத்துவர்கள் செந்தில்குமார் மனைவி விஜயலட்சுமி மற்றும் அவர் உறவினர்களிடம் உடல் உறுப்புகள் தானம் குறித்து தெரிவித்தனர். இதனால் அவரது மனைவி தனது கணவரின் உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்வதாக தெரிவித்தார்.

    இதையடுத்து உடனடியாக மருத்துவ குழுவினர் நேற்று இரவு 9 மணி முதல் இன்று விடியற்காலை இரண்டு மணி வரை விடிய, விடிய செந்தில்குமாரின் உடலில் நல்ல நிலையில் உள்ள இருதயம், நுரையீரல், லிவர், கிட்னி, கணையம், கண் உள்ளிட்ட முக்கிய உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து சென்னை, வேலூர், சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    கண் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெற்றுக் கொள்ளப்பட்டது. இதுகுறித்து மனைவி விஜயலட்சுமி கூறும் போது என் கணவர் தான் எங்களுடைய வாழ்க்கை என்று இருந்தோம். அவர் இல்லாத இந்த வாழ்க்கையை நானும் என் இரண்டு பிள்ளைகளும் எப்படி வாழ்வது என்று தெரியாமல் தவித்து வருகிறோம். இதனால் தமிழக அரசு கருணை அடிப்படையில் அரசு வேலை ஒன்று வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

    ×