search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விபத்தில் காயமடைந்த வாலிபர் மூளைசாவு அடைந்ததால் உடல் உறுப்புகள் தானம்
    X

    விபத்தில் காயமடைந்த வாலிபர் மூளைசாவு அடைந்ததால் உடல் உறுப்புகள் தானம்

    • மோட்டார் சைக்கிளை ரஞ்சித் ஓட்டினார். பின்னால் சந்தோஷ் அமர்ந்திருந்தார்.
    • காயம் அடைந்த சந்தோசை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, அகரமேல் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரின் மகன் சந்தோஷ் (23), லேத் மெஷின் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இவரது நண்பர் ரஞ்சித். இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    மோட்டார் சைக்கிளை ரஞ்சித் ஓட்டினார். பின்னால் சந்தோஷ் அமர்ந்திருந்தார். பூந்தமல்லி - பெங்களூரு நெடுஞ்சாலை, பூந்தமல்லி அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது ரஞ்சித் ஓட்டி சென்ற வாகனம் மோதியதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் சந்தோசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து காயம் அடைந்த சந்தோசை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ் நேற்று இரவு மூளை சாவு அடைந்தார். இதையடுத்து அவரது பெற்றோர் சந்தோசின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த நிலையில் இறந்து போன சந்தோசின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

    இச்சம்பவம் குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×