என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "donated"
- கோவை அரசு மருத்துவமனை முதல் ரேஸ்கோர்ஸ் வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- நர்சிங் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ரங்கோலி வரைதல், போஸ்டர் தயாரிப்பு ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.
கோவை,
உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று நிறைவு விழா நடைபெற்றது.
இதுகுறித்து மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறியதாவது:-
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எம்.பி.பி.எஸ் மாணவர்கள், இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட கோவையில் உள்ள 5 மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு தாய்ப்பால் குறித்த வினாடி-வினா போட்டி நடைபெற்றது.
போத்தனூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரிக்கு சென்று தாய்ப்பால் குறித்து குழந்தைகள் நல துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை அரசு மருத்துவமனை முதல் ரேஸ்கோர்ஸ் வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் முக்கியவத்துவத்தை உணர்த்தும் வகையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நாடகம் நடித்து காண்பித்தனர். கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு புரியும் வகையில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நர்சிங் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ரங்கோலி வரைதல், ஸ்லோகன் எழுதுதல், போஸ்டர் தயாரிப்பு ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கிக்கு கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை 484 பேர் மொத்தம் 1,280 லிட்டர் தாய்ப்பால் தானமாக அளித்துள்ளனர். இவ்வாறு தொடர்ந்து தாய்ப்பால் அளித்த தாய்மார்கள் கவுரவிக்க ப்பட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சிகளில் குழந்தைகள் நலத்துறை தலைவர் லட்சுமணசாமி, பச்சிளங் குழந்தைகள் பிரிவு நோடல் அதிகாரி சசிகுமார் பச்சிளங் குழந்தைகள் சிறப்பு நிபுணர்கள் செந்தில்குமார், சத்யன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- நாகராஜ் ஜவுளிக்கடையில் சூப்பர் வைசராக பணியாற்றி வருகிறார்.
- இறந்தவர்களின் உடலில் இருந்து தோல் தானத்தின் மூலம் தோல் எடுக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம்,
கோவை மேட்டுப்பாளையம் நடூரை சேர்ந்தவர் வீரசாமி. இவரது மனைவி வள்ளியம்மாள். இவர்களது மகன் நாகராஜ்(31). இவர் ஜவுளிக்கடையில் சூப்பர் வைசராக பணியாற்றி வருகிறார்.
இதனிடையே இவர் தீராத வயிற்று வலியால் அவதியுற்று வந்ததாக தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த நாகராஜ் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு வந்த பெற்றோர் மகன் இறந்தை கண்டு கதறி அழுதனர்.
இதையடுத்து நாகராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
அப்போது உடலை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். சோதனையில் உடலில் தோல், கண் ஆகியவையின் செல்கள் உயிருடன் இருந்ததை பார்த்தனர். இதையடுத்து நாகராஜின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கண் மற்றும் தோலினை தானமாக வழங்க முடியுமா என கேட்டனர்.
அதற்கு நாகராஜின் தாயாரும் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து நாகராஜின் கண், தோல் ஆகியவற்றை மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்து எடுத்தனர்.
மேட்டுப்பாளையம் ஆஸ்பத்திரி தொடங்கி 138 ஆண்டுகளில் இதுதான் முதன் முறையாக இறந்தவரின் உடலில் இருந்து கண், தோல் அறுவை சிசிச்சை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து டாக்டர் ஜெயராமன் கூறுகையில், இறந்தவரின் உடலில் இருந்து எடுக்கப்படும் தோல் தீ மற்றும் சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவர்களுக்கு பொறுத்தப்படும். எச்.ஐ,வி மற்றும் டி.பி நோயினால் பாதிக்கப்படுவர்கள் தோல் தானம் செய்ய முடியாது. மாவட்டத்தில் மற்ற மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடலில் இருந்து தோல் தானத்தின் மூலம் தோல் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மேட்டுப்பாளையத்தில் இது முதன்முறை என தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்