மேட்டுப்பாளையத்தில் தற்கொலை செய்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

நாகராஜ் ஜவுளிக்கடையில் சூப்பர் வைசராக பணியாற்றி வருகிறார். இறந்தவர்களின் உடலில் இருந்து தோல் தானத்தின் மூலம் தோல் எடுக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் தற்கொலை செய்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
Published on

மேட்டுப்பாளையம்,

கோவை மேட்டுப்பாளையம் நடூரை சேர்ந்தவர் வீரசாமி. இவரது மனைவி வள்ளியம்மாள். இவர்களது மகன் நாகராஜ்(31). இவர் ஜவுளிக்கடையில் சூப்பர் வைசராக பணியாற்றி வருகிறார்.

இதனிடையே இவர் தீராத வயிற்று வலியால் அவதியுற்று வந்ததாக தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த நாகராஜ் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு வந்த பெற்றோர் மகன் இறந்தை கண்டு கதறி அழுதனர்.

இதையடுத்து நாகராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

அப்போது உடலை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். சோதனையில் உடலில் தோல், கண் ஆகியவையின் செல்கள் உயிருடன் இருந்ததை பார்த்தனர். இதையடுத்து நாகராஜின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கண் மற்றும் தோலினை தானமாக வழங்க முடியுமா என கேட்டனர்.

அதற்கு நாகராஜின் தாயாரும் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து நாகராஜின் கண், தோல் ஆகியவற்றை மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்து எடுத்தனர்.

மேட்டுப்பாளையம் ஆஸ்பத்திரி தொடங்கி 138 ஆண்டுகளில் இதுதான் முதன் முறையாக இறந்தவரின் உடலில் இருந்து கண், தோல் அறுவை சிசிச்சை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து டாக்டர் ஜெயராமன் கூறுகையில், இறந்தவரின் உடலில் இருந்து எடுக்கப்படும் தோல் தீ மற்றும் சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவர்களுக்கு பொறுத்தப்படும். எச்.ஐ,வி மற்றும் டி.பி நோயினால் பாதிக்கப்படுவர்கள் தோல் தானம் செய்ய முடியாது. மாவட்டத்தில் மற்ற மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடலில் இருந்து தோல் தானத்தின் மூலம் தோல் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மேட்டுப்பாளையத்தில் இது முதன்முறை என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com