என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முதல்-அமைச்சர் நடவடிக்கையால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது
- பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் அரசு பள்ளிகளில் உள்ளன.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்ப ட்டதை அடுத்து மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் தஞ்சை கீழராஜ வீதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் சேர்க்கை நடந்து வருகிறது.
அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியை சித்ரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்க ப்பட்டன. முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நடவடிக்கையால் அரசு பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். பல பெற்றோரும்தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ .1000 வழங்குதல் என்பன உள்ளிட்ட
பல்வேறு சலுகை களை முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் அறிவித்து ள்ளார். மேலும் அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் அரசு பள்ளிகளில் உள்ளன. இதன் காரணமாக அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு அதிக அளவில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த பள்ளியில் கூட முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகளவில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது உடன் மாவ ட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேன்மதி இருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்