என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![சூரப்பள்ளத்தில், தென்னையில் பூச்சி- நோய் மேலாண்மை குறித்த சிறப்பு வயலாய்வு முகாம் சூரப்பள்ளத்தில், தென்னையில் பூச்சி- நோய் மேலாண்மை குறித்த சிறப்பு வயலாய்வு முகாம்](https://media.maalaimalar.com/h-upload/2023/04/29/1873829-8.webp)
சிறப்பு வயலாய்வு முகாமை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
சூரப்பள்ளத்தில், தென்னையில் பூச்சி- நோய் மேலாண்மை குறித்த சிறப்பு வயலாய்வு முகாம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டு, ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மற்றும் வாடல் நோய் போன்றவற்றிற்கான அறிகுறிகள்.
- விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் கிராமத்தில் தென்னையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த சிறப்பு வயலாய்வு முகாம் நடைபெற்றது.
முகாமில் தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்துராஜா, வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் பாபு, பட்டுக்கோட்டை வேளாண்மை ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் சித்ரா, சூரப்பள்ளம் ஊராட்சி தலைவர் தங்கம், துணைத்தலைவர் மணிவேல், ஊராட்சி மன்ற உறுப்பினர் லதா ஜீவானந்தம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பட்டுக்கோ ட்டை வேளா ண்மை உதவி இயக்குனர் மாலதி வரவேற்று பேசினார். மேலும், தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டு, சிவப்புக்கூன்வண்டு, ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மற்றும் வாடல் நோய் போன்றவற்றிற்கான அறிகுறிகள் மற்றும் அதனை சரி செய்வதற்கான மேலாண்மை முறைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
தொடர்ந்து, விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பாபு விளக்கமளித்தார்.
மேலும், தென்னையில் உர மேலாண்மை, நுண்சத்து இடுதல், காண்டாமிருக வண்டு மற்றும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை முறைகள் குறித்த செயல்விளக்கங்கள் மற்றும் கருத்து கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.
செயல்விளக்கங்க ளுக்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர்கள் அப்சரா மற்றும் சன்மதி, விதை ஆய்வாளர் நவீன் ஆகியோர் செய்திருந்தனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ஜெயபாரதி, பட்டுக்கோட்டை வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் முருகானந்தம் ஆகியோர் செய்திருந்தனர்.
முடிவில் தோட்டக்கலை அலுவலர் பிருந்தா நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)