search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
    X

    கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர், பரமேஸ்வரர் ஆலயத்திலுள்ள பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த காட்சி.

    வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

    பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமேஸ்வர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு வைகாசி விசாகத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    அதேபோல் பிலிக்கல் பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனியாண்டவர் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு விஜயகிரி பழனியாண்டவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விஜயகிரி வடபழனி ஆண்டவர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள்பெற்றனர்.

    நன்செய் இடையாறு திருவல்லீஸ்வரர் கோவில் உள்ள முருகன், காவிரி ஆற்றங்கரை அருகேயுள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள பாலமுருகன் கோவில், கபிலர்மலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில், அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர்கோயில், ராஜா சாமி கோவில், பேட்டை பகவதியம்மன் கோயிலில் உள்ள முருகன், மற்றும் கந்தம்பாளையம் அருகே உள்ள அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோயில்களில் உள்ள முருகப்பெருமானுக்கும் வைகாசி விசாகத்தில் முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும்,சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×