search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
    X

    ஆடி அமாவாசை முன்னிட்டு கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன், வேலூர் மகா மாரியம்மன், பரமத்தி வேலூர் செல்லாண்டியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தபோது எடுத்த படம்.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

    • பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன், வேலூர் பேட்டை மகா மாரியம்மன், வேலூர் செல்லாண்டி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் ,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    அதேபோல் நன்செய் இடையாறு மகாமாரியம்மன், திருவேலீஸ்வரர் கோவில், காவிரி ஆற்றங்கரையில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவில், பேட்டை பகவதி அம்மன் கோவில், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன் கோவில், கொந்தளம் மாரியம்மன் கோவில் ,சேளூர் மாரியம்மன் கோவில், அய்யம்பாளையம் மாரியம்மன் கோவில், ஆனங்கூர் மாரியம்மன் மற்றும் செல்லாண்டி அம்மன் கோவில், வடகரையாத்தூர் மாரியம்மன் கோவில், பரமத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×