search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடத்தூரில் சிறுதானிய கண்காட்சி
    X

    கடத்தூரில் சிறுதானிய கண்காட்சி

    • பாரம்பரிய நெல் விதைகள், கம்பு,கேழ்வரகு ,சாமை, திணை உள்ளிட்ட தானிய வகைகள் வைக்கப்பட்டிருந்தது.
    • இயற்கை முறை விவசாயத்தின் பயன்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மை துறை சார்பில் சிறுதானிய காண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பாரம்பரிய நெல் விதைகள் மற்றும் இயற்கை முறை கம்பு,கேழ்வரகு ,சாமை, திணைஉள்ளிட்ட பல்வேறு வகையான தானிய வகைகள் வைக்கப்பட்டிருந்தது.இயற்கை முறை விவசாயத்தால் பயன்படுத்தப்பட்டு விளையும் தானியங்களின் பயன்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில் கிராமப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

    Next Story
    ×