search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில்   இன்றும், நாளையும் கன மழை பெய்யும்
    X

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும்

    • நேற்றிரவு பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • இந்த நிலையில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    சேலம்:

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது . அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது-

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இன்று (2-ந் தேதி) நாளை ( 3-ந் தேதி) ஆகிய 2 நாட்களும் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×