என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தூத்துக்குடியில் மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை
Byமாலை மலர்30 Jun 2022 9:22 AM GMT (Updated: 30 Jun 2022 9:30 AM GMT)
- மளிகை கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 30 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை போயிருந்தது.
- சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கொண்டு கொள்ளையில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள ராஜூவ்நகரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 38). இவர் சிவந்தாகுளம் பகுதியில் மளிகைகடை நடத்தி வருகிறார். நேற்று இரவு பெருமாள் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு தூங்க சென்றார்.
இந்நிலையில் இன்று அதிகாலை பெருமாள் வழக்கம் போல கடையை திறக்க சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 30 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை போயிருந்தது.
போலீசார் விசாரணை
இது தொடர்பாக அவர் தென்பாகம் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை சேகரித்து அதில் பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளையில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X