என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆறுமுகநேரியில் ராமர் பட்டாபிஷேக விழா
- லட்சுமி மாநகரம் மாரியம்மன் கோவில் சார்பில் ராமாயண ஏடு வாசிப்பு 31 நாட்கள் நடைபெற்றது.
- இதன் நிறைவாக இன்று காலை ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரியில் ஆடி மாதம் தினசரி இரவுதோறும் ராமாயண ஏடு வாசிப்பு நடைபெறுவது பழமையான வழக்கம். இதன்படி லட்சுமி மாநகரம் மாரியம்மன் கோவில் சார்பில் ராமாயண ஏடு வாசிப்பு 31 நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவாக இன்று காலை ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.இதற்கான சிறப்பு வழிபாடு நிகழ்ச்சியில் பூஜகர் பால் பாண்டியன், மாரியம்மன் கோவில் நிர்வாகிகள் ராதா கிருஷ்ணன், தனசேகரன், தங்கபாண்டியன், அம்மனின் அருட்பாலகர்கள் சக்திவேல், கந்தப்பன், நகர் நல மன்ற தலைவர் பூபால் ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஆறுமுகநேரி ஸ்ரீ ராமலட்சுமி அம்மன் கோவில் சார்பிலும், கீழநவ்வலடிவிளை நாராயண சுவாமி கோவிலிலும் பட்டாபிஷேக விழா நடந்தது.
பேயன்விளை ராமர் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் தங்க கண்ணன் சிறப்பு பூஜையை நடத்தினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் கோபிகிருஷ்ணன் உள்பட பலர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்