search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுமுகநேரியில் ராமர் பட்டாபிஷேக விழா
    X

    லட்சுமி மாநகரம் கோவிலில் பட்டாபிஷேக விழா நடந்த போது எடுத்த படம்.

    ஆறுமுகநேரியில் ராமர் பட்டாபிஷேக விழா

    • லட்சுமி மாநகரம் மாரியம்மன் கோவில் சார்பில் ராமாயண ஏடு வாசிப்பு 31 நாட்கள் நடைபெற்றது.
    • இதன் நிறைவாக இன்று காலை ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரியில் ஆடி மாதம் தினசரி இரவுதோறும் ராமாயண ஏடு வாசிப்பு நடைபெறுவது பழமையான வழக்கம். இதன்படி லட்சுமி மாநகரம் மாரியம்மன் கோவில் சார்பில் ராமாயண ஏடு வாசிப்பு 31 நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவாக இன்று காலை ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.இதற்கான சிறப்பு வழிபாடு நிகழ்ச்சியில் பூஜகர் பால் பாண்டியன், மாரியம்மன் கோவில் நிர்வாகிகள் ராதா கிருஷ்ணன், தனசேகரன், தங்கபாண்டியன், அம்மனின் அருட்பாலகர்கள் சக்திவேல், கந்தப்பன், நகர் நல மன்ற தலைவர் பூபால் ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் ஆறுமுகநேரி ஸ்ரீ ராமலட்சுமி அம்மன் கோவில் சார்பிலும், கீழநவ்வலடிவிளை நாராயண சுவாமி கோவிலிலும் பட்டாபிஷேக விழா நடந்தது.

    பேயன்விளை ராமர் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் தங்க கண்ணன் சிறப்பு பூஜையை நடத்தினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் கோபிகிருஷ்ணன் உள்பட பலர் செய்திருந்தனர்.

    Next Story
    ×