search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் பி.எஸ்.என்.எல் சேவை துண்டிப்பால் பொதுமக்கள் தவிப்பு
    X

    கொடைக்கானல் பி.எஸ்.என்.எல். மையம்

    கொடைக்கானலில் பி.எஸ்.என்.எல் சேவை துண்டிப்பால் பொதுமக்கள் தவிப்பு

    • கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாகவே பி.எஸ்.என்.எல் இணையதள சேவை அடிக்கடி பழுதாகி சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் இன்னலை ஏற்படுத்தி வருகிறது.
    • பி.எஸ்.என்.எல் வயர்களை துண்டித்து இடையூறு ஏற்படுத்தி வரும் ஒப்பந்ததாரர்களை எச்சரிக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு கொடைக்கானல் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாகவே பி.எஸ்.என்.எல் இணையதள சேவை அடிக்கடி பழுதாகி சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் இன்னலை ஏற்படுத்தி வருகிறது.

    நகர் பகுதியில் அடிக்கடி பி.எஸ்.என்.எல் சேவை நிறுத்தப்படுவதால் வங்கிகள் கேபிள் நெட்வொர்க் வசதிகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.இதனால் வங்கி சேவைகளில் பணப் பரிமாற்றம் செய்வதில் கடும் சிரமம் ஏற்படுகிறது.

    பி.எஸ்.என்.எல் நிர்வாகம் அடிக்கடி துண்டிக்கப்படும் சேவையை கண்காணித்து தடையில்லா சேவையை வழங்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான சாலையை குறுக்கி வாய்க்கால் அமைக்கிறோம் என்ற பெயரில் வாகன நெரிசல்களை ஏற்படுத்தி வரும் ஒப்பந்ததாரர்களால் இந்த நிகழ்வு அடிக்கடி நடப்பதாகவும் கூறப்படுகிறது.

    ஏற்கனவே வடிகால் வாய்க்கால் அமைத்து சாலையை குறுக்கி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் நிலையில் பி.எஸ்.என்.எல் வயர்களை துண்டித்து மீண்டும் மீண்டும் பொது மக்களுக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தி வரும் ஒப்பந்ததாரர்களை எச்சரிக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு கொடைக்கானல் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×