search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பது குறித்து செயல் விளக்கம்
    X

    ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பது குறித்த செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

    ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பது குறித்து செயல் விளக்கம்

    • நானோ யூரியா இலை வழியே ஊடுருவி இலை முதல் வேர் வரை சென்று தழைச்சத்தினை அளிக்கின்றது.
    • ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு செயல் விளக்கம் வயலில் செய்து காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி:

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அட்மா திட்டம் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமம் வள்ளுவகுடி பகுதியில் நானோ யூரியா ட்ரோன் மூலம் தெளிப்பது குறித்து செயல் விளக்கம் ஜானகிராமன் என்பவரின் வயலில் வேளாண்மை இணை இயக்குனர் ஜெ.சேகர் தலைமையில் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

    வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் முன்னிலை வகித்தார். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பார்கவி வரவேற்றார். வேளாண்மை இணை இயக்குனர் சேகர், நானோ யூரியாவின் முக்கியத்துவத்தையும் பயன்பாடுகளையும் பற்றி கூறினர்.

    நானோ யூரியா இலை வழியே ஊடுருவி இலை முதல் வேர் வரை சென்று தழைச்சத்தினை அளிக்கின்றது. நானோ யூரியா உரத்தின் பயன்பாட்டுத்திறன் குருணை வடிவ யூரியாவை விட அதிகமாக உள்ளது.

    மண் நீர் மற்றும் காற்று மாசு அடையாமல் சுற்றுச்சூழலை பாதுகாத்து 8 சதவீத மகசூலை நெற்பயிரில் அதிகரிக்கிறது.500 மில்லி நானோ யூரியா திரவம் ஒரு மூட்டை யூரியாவுக்கு இணையான பலனை அளிக்கிறது. ஒரு ஏக்கர் நெல் வயலுக்கு 500 மி.லி நானோ யூரியா மற்றும் 20 மி.லி ஒட்டுப்பசை தேவைப்படுகிறது.

    அனைத்து வகையான பயிர்களுக்கும் யூரியா மேலுறத்திற்கு பதிலாக நானோ யூரியாவை பயன்படுத்தலாம் என்று கூறினார்கள்.பின்னர் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு செயல் விளக்கம் வயலில் செய்து காண்பிக்கப்பட்டது.

    இதில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். வேளாண்மை அலுவலர் சுகன்யா, உதவி வேளாண்மை அலுவலர் எஸ். தமிழரசன் மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர் செவுந்தரராஜன் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×