என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புளியங்குடி விவசாயி கொலையில் பெண் உள்பட மேலும் 2 பேருக்கு வலைவீச்சு
- அய்யாத்துரை மாமனார் கருத்தப்பாண்டி கொடுத்த நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார்.
- சின்னப்பாண்டி மற்றும் அலங்காரம் ஆகியோருக்கும் அய்யாத்துரைக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது.
புளியங்குடி:
புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணிபேரிபுதூரை சேர்ந்தவர் அய்யாத்துரை (வயது43). இவரது மனைவி கலாவதி.
வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அய்யாத்துரை தற்போது சொந்த ஊரில் விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் அய்யாத்துரை நேற்று கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் அய்யாத்துரை மாமனார் கருத்தப்பாண்டி கொடுத்த நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார்.
இந்த நிலம் தொடர்பாக கருத்தபாண்டியின் சகோதரர்களான சின்னப்பாண்டி மற்றும் அலங்காரம் ஆகியோருக்கும் அய்யாத்துரைக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது.நேற்று அய்யாத்துரை தென்னந்தோப்புக்கு சென்ற போது அங்கு வந்த அலங்காரம், சின்னப்பாண்டி, சின்னபாண்டி மனைவி பேச்சியம்மாள் ஆகிய 3 பேர் வழிமறித்து அரிவாளால் வெட்டி கொன்றது தெரியவந்தது.
இதையடுத்து புளியங்குடி சின்னப்பாண்டியை கைது செய்தனர். அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாளையும் கைப்பற்றினர். மேலும் தலைமறைவாக உள்ள அலங்காரத்தையும், பேச்சியம்மளையும் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்