search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடி பஜார் சந்திப்பில் போலீஸ் பூத்தை உடனே அப்புறப்படுத்த வேண்டும்-வியாபாரிகள் சங்கம் தீர்மானம்
    X

    உடன்குடி பஜார் சந்திப்பில் போலீஸ் பூத்தை உடனே அப்புறப்படுத்த வேண்டும்-வியாபாரிகள் சங்கம் தீர்மானம்

    • பஜார் பகுதியில் பயணத்திற்கு பயன்படாத பழுதான ரோட்டை புதுப்பிக்க வேண்டும்.
    • கோரிக்கைகளை 15 நாட்களுக்குள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உடன்குடி:

    உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்க நிர்வாக கமிட்டி கூட்டம் சங்க கமிட்டி தலைவர் ரவி தலைமையில் நடந்தது. சங்க செயலாளர் வேல்ராஜன், துணை செயலாளர் ராஜா, பிரதீப் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க பொருளாளர் சுந்தர்சிங் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் உடன்குடி மெயின் பஜார் 4 சந்திப்பில், வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக உள்ள போலீஸ் பூத் அலுவலகத்தை உடனடியாக அப்புறப்படுத்தி வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும், உடன்குடி பஜார் வீதிகளில் அலையும் மாடுகள் மற்றும் பன்றிகளை உடனடி யாக அப்புறப்படுத்த வேண்டும், பஜார் பகுதியில் பயணத்திற்கு பயன்படாத பழுதான ரோட்டை புதுப்பிக்க வேண்டும். இக் கோரிக்கைகளை 15 நாட்களுக்குள் செயல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது வியாபாரிகள் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய போரா ட்டம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அமுதன் ஆண்ட்ரூஸ் நன்றி கூறினார்.

    Next Story
    ×