search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுமுகநேரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
    X

    பேரணி நடந்த போது எடுத்த படம்.

    ஆறுமுகநேரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

    • பேரணிக்கு பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார்.
    • பேரணியில் மாணவர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்றது.

    பேரணிக்கு பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார்.

    செயல் அலுவலர் கணேசன் பேரணியை தொடங்கி வைத்தார். வார்டு கவுன்சிலர்கள் வெங்கடேசன், புனிதா, தீபா, சந்திரசேகர், சிவக்குமார், தயாவதி, சகாயரமணி, மரிய நிர்மலாதேவி, கா.ஆ. மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் கண்ணன் மற்றும் மாணவர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    பேரூராட்சி அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணி ஆறுமுகநேரி மெயின் பஜார் வழியாக தபால் நிலையம் முன்பு நிறைவுபெற்றது.

    Next Story
    ×