search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
    X

    மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டவர்கள்.


    குட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

    • குட்டம் நுகர்வோர் பாதுகாப்பு கழகம் சார்பில் குட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியை மாதிரி பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.
    • மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள குட்டம் கிராமத்தில் தமிழக அரசின் அண்ணாகிராமமறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. திசையன்விளை தாசில்தார் செல்வக்குமார் தலைமை தாங்கினார். சமூகநல திட்ட தாசில்தார் பத்மபிரியா, துணை தாசில்தார் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குட்டம் பஞ்சாயத்து தலைவர் சற்குணராஜ் வரவேற்று பேசினார். குட்டம் நுகர்வோர் பாதுகாப்பு கழகம் சார்பில் குட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியை மாதிரி பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.

    திசையன்விளையில் துணை கருவூலம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 30 கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது. பொதுமக்களிடம் இருந்து 101 மனுக்கள் பெறப்பட்டது. சில மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மற்ற மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. முகாமில் திசையன்விளை வருவாய் ஆய்வாளர் துரைசாமி, குட்டம் கிராம நிர்வாக அலுவலர் சந்தனகுமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×