search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனியில் பெண் தூய்மை பணியாளர் படுகொலையை கண்டித்து போராட்டம்
    X

    கொலை செய்யப்பட்ட அன்னம்மாள்

    பழனியில் பெண் தூய்மை பணியாளர் படுகொலையை கண்டித்து போராட்டம்

    • பெண் தூய்மை பணியாளர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
    • மேலும் இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் பெத்தநாயக்கன் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அன்னம்மாள் (வயது 50). தொகுப்பூதிய அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவரது கணவர் சுப்பிரமணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மகள்களுக்கு திருமணம் செய்து வெளியூரில் வசித்து வருகின்றனர். தனியாக வசித்து வந்த அன்னம்மாள் திடீரென மாயமானார்.

    இந்நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு முட்புதரில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அவரது உடல் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க–ப்பட்டது.

    அப்போது இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய கோரி போராட்ட–த்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் உடலை பெற்று சென்றனர்.

    ஆனால் கொலை நடந்து 5 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை குற்றவாளிகள் பிடிபடாததை கண்டித்து இன்று பழனி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×