search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரும்பாறை அருகே மலைகிராமத்திற்கு சாலை வசதி செய்துதர கோரிக்கை
    X

    சோலைக்காடு-வண்ணாந்துறை பகுதியில் ஒத்தயடி பாதையில் நடந்து செல்லும் மக்கள்.

    பெரும்பாறை அருகே மலைகிராமத்திற்கு சாலை வசதி செய்துதர கோரிக்கை

    • சோலைக்காட்டில் இருந்து செல்ல வேண்டும் என்றால் சுமார் 2 கி.மீ தூரம் ஒத்தையடி பாதையில் நடந்தான் செல்ல வேண்டும்.
    • சாலை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே சோலைக்காடு கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வண்ணாந்துறை என்ற ஓடை உள்ளது.

    சோலைக்காட்டில் இருந்து இந்த பகுதிக்கு செல்ல வேண்டும் என்றால் சுமார் 2 கி.மீ தூரம் ஒத்தையடி பாதையில் நடந்தான் செல்ல வேண்டும். இந்த ஒத்தையடி பாதையில் இருபுறமும் முட்செடி, கொடிகள் படர்ந்து உள்ளது.

    மேலும் பாறைகளும் உள்ளன. இதனால் இப்பகுதி மக்களும், விவசாயிகளும் சென்றுவர மிகவும் சிரமப்படுகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×