search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
    X

    செண்பகவல்லியம்மன் கோவிலில் கொடிமரத்திற்கு தீபாராதனை காட்டப்பட்ட போது எடுத்தபடம்.

    கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

    • பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
    • 13-ந் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை, திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.

    காலை 7 மணிக்கு கொடி மரத்தில் கொடியேற்றம் விமர்சையாக நடை பெற்றது.

    பின்னர் சுவாமி, அம்பாள், கொடி மரம், நந்தி, பலிபீடம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஜனகல்யாண் அமைப்பாளர் திருப்பதிராஜா, நகர்மன்ற தலைவர் கருணாநிதி, யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், அறங்காவலர் குழு உறுப்பினர் இந்துமதி, வணிக வைசிய சங்க தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் வெங்கடேச சென்ன கேசவன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகேசன், பொறியாளர் அணி ரமேஷ், பா.ம.க. மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மற்றும் அனைத்து மண்டக படிதாரார்கள் கலந்து கொண்டனர்.

    இந்த விழா இன்று தொடங்கி வருகிற 15 -ந் தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை 8 மணி, இரவு 7 மணிக்கும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திரு வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். ஒவ்வொருநாளும் ஒவ்வொரு மண்டகபடிதாரர்கள் சார்பில் விழாகள் நடைபெறும்.

    1- ம் திருநாளான இன்று பிராமணர் சமூகம் சார்பில் இரவு 7மணிக்கு சுவாமி, அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் திருவீதி உலா நடைபெறவுள்ளது. 2 ம் திருநாளான 6-ந் தேதி பூலோகப்பாண்டியத்தேவர் மற்றும் ரத்தினவேல்ச்சாமித் தேவர் சார்பில் சுவாமி- அம்பாள் திருவீதி உலா நடைபெறுகிறது. 3-ம் திருநாளான 7-ந் தேதி இல்லத்துப்பிள்ளைமார் சமுகம் சார்பில் பூதவாகனம் - காமதேனு வாகனத்தில் சுவாமி- அம்பாள் திருவீதி உலா நடைபெறுகிறது. 4- ம் திருநாளான 8- ந் தேதி மேடைத்தளவாய் கட்டளைதாரர் சார்பில் இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாள் திருவீதிஉலா மற்றும் குடவரை வாசல் தரிசனம் நடைபெறவுள்ளது. 5-ம் திருநாளான 9-ந் தேதி விஸ்வகர்ம தொழிலாளர் சங்கம் சார்பில் இரவு 7 மணிக்கு காமதேனு வாகனத்தில் சுவாமி அம்மன் திருவீதி உலா நடைபெறுவுள்ளது. 6-ம் திருநாளான 10-ந் தேதி அழகர் ஜூவல்லர்ஸ் அழகிரிசாமி செட்டியார் சார்பில் இரவு 7 மணிக்கு யானை மற்றும் அன்னவாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா நடைபெறும். 7-ம் திருநாளான 11-ந் தேதி இரவு 7 மணிக்கு சைவ வேளாளர் சங்கம் சார்பில், நடராஜர் சப்பரத்தில் சிவப்பு சாத்திய கோலத்தில் எழுந்தருளல் நடக்கிறது. 8 -ம் திருநாள் 12-ந் தேதி இரவு 7 மணிக்கு சைவ செட்டியார்கள் சங்கம் சார்பில் குதிரை வாகனம், கிளி வாகனத்தில் சுவாமி - அம்பாள் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். 9-ம் திருநாளான 13-ந் தேதி காலை 8 மணிக்கு கம்மவார் சங்கம் சார்பில் தேரோட்டம் நடக்கிறது.

    9-ம் திருநாளான வணிக வைசிய சங்கம் மண்டகபடிதாரர் சார்பில் இரவு 7 மணிக்கு யானை முன் செல்ல வானவேடிக்கைகள் முழங்க யானை மற்றும் அன்னவாகனத்தில் சுவாமி - அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது.

    10-ம் திருநாள் மாலை 6 மணிக்கு ஆயிர வைசிய காசுக்கார செட்டி பிள்ளைகள் சங்கம் சார்பில் தீர்த்தவாரி தீபாராதனை நடக்கிறது. இரவு 12 மணிக்கு ரிஷப வானத்தில் சுவாமி - அம்பாள் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    11-ம் திருநாளான 15-ந் தேதி இரவு 7 மணிக்கு கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்கம் சார்பில் வானவேடிக்கைகள் முழங்க மலர்களால் அலங்கரிக்கபட்ட தேரில் சுவாமி அம்பாள் எழுந்தருளி தெப்ப திருவிழா நடைபெறவுள்ளது.

    விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையரும், தக்காருமான சங்கர், செயல்அலுவலர் வெள்ளைச்சாமி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்துவருகின்றனர்.

    Next Story
    ×