search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளராக பணிபுரிய வாய்ப்பு
    X

    சேலம் மாவட்டத்தில் வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளராக பணிபுரிய வாய்ப்பு

    முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களுக்கு சேலம் மாவட்டத்தில் வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளராக பணிபுரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் 08.11.2011 அன்று பணியிழந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் " வேலை உறுதி திட்ட பணி ஒருங்கிணைப்பாளராக" பணிபுரிய அரசால் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    எனவே, 8.11.2011 அன்று பணியிழந்த முன்னாள் மக்கள் நலப் பணியாளர்களில் தற்போது இப்பணியில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் ஏற்கனவே பணியாற்றிய விவரத்துடன், தங்களது விருப்பக் கடிதம் மற்றும் அதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்–பத்தை தாங்கள் பணியாற்றிய ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ)யிடம் வருகிற 13-ந் தேதி முதல் 18-ந் தேதிக்குள் வழங்க வேண்டும்.

    அவ்வாறு பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே இப்பணியிடத்திற்கு பரிசீ–லிக்கப்படுவர் என்பதால் இவ்வறிவிப்பிற்கு ஏற்ப தவறாமல் தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×