search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காயல்பட்டினத்தில் விஷமருந்தை தின்றுவிட்டு இட்லி வியாபாரத்திற்கு சென்ற மூதாட்டி பலி
    X

    காயல்பட்டினத்தில் விஷமருந்தை தின்றுவிட்டு இட்லி வியாபாரத்திற்கு சென்ற மூதாட்டி பலி

    • முத்துலட்சுமி தெரு தெருவாக சென்று இட்லி வியாபாரம் செய்து வந்தார்.
    • காலையில் இட்லி விற்க சென்ற முத்துலட்சுமி மாலையில் மிகவும் தள்ளாடிய நிலையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் சேதுராஜா தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 60). பிளம்பர்.

    இட்லி வியாபாரம்

    இவரது மனைவி முத்துலட்சுமி (55). இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். முத்துலட்சுமி தெரு தெருவாக சென்று இட்லி வியாபாரம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் கடந்த ஒரு வாரமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் இட்லி வியாபாரத்திற்கு சென்று வந்துள்ளார். இதனால் அவரது மகனும், மகளும், இப்படிப்பட்ட நிலையில் ஏன் வியாபாரம் செய்ய வேண்டும் என கேட்டுள்ளனர்.

    விஷம் மருந்து தின்றார்

    இருந்தபோதும் முத்துலட்சுமி தொடர்ந்து இட்லி விற்க சென்றுள்ளார். கடந்த 6-ந் தேதி காலையில் இட்லி விற்க சென்றவர் மாலையில் மிகவும் தள்ளாடிய நிலையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

    அப்போது அவரது கணவர், எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் ஏன் இப்படி கஷ்டப்படுகிறாய்? என்று கேட்டுள்ளார். அதற்கு முத்துலட்சுமி, நான் இத்தனை நாள் இட்லி வியாபாரம் செய்து உழைத்து வந்தேன்.

    இப்போது நோய்வாய்ப்பட்டு யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. அதனால் காலையிலேயே விஷ மருந்தை தின்றுவிட்டு தான் இட்லி விற்க சென்றேன்.

    இப்போது எனக்கு மயக்கமாக வருகிறது என்று கூறியுள்ளார்.

    இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் மகன் மற்றும் மருமகள் ஆகியோர் உடனடியாக முத்துலட்சுமியை காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பரிதாப சாவு

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முத்துலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

    இச்சம்பவம் பற்றி ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×