search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷம் குடித்த முதியவர் சாவு
    X

    விஷம் குடித்த முதியவர் சாவு

    • வீட்டில் மாடி ஏறும்போது படிகட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
    • வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே பளையூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னாகவுண்டர் (வயது 75).

    கூலித்தொழிலாளி யான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் மாடி ஏறும்போது படிகட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு கை முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மனவேதனை அடைந்து காணப்பட்ட சின்னாகவுண்டர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மனைவி பழனியம்மாள் பெரும்பாலை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×