search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலக்கோட்டை அருகே தனியார் பஸ் மோதி முதியவர் பலி
    X

    கோப்பு படம்

    நிலக்கோட்டை அருகே தனியார் பஸ் மோதி முதியவர் பலி

    • தனியார் பஸ் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியதில் முதியவர் தூக்கிவீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
    • நிலக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே ஜெய்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஜெயபால்(64). விவசாயியான இவர் மீனாட்சிபுரத்தில் உள்ள தோட்டகுடியிருப்பில் இருந்தார்.

    இவரது 8 வயது பேரன் சரண் நிலக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் சரண் தாத்தா வீட்டிற்கு வந்தான். அங்கிருந்து சரணை அழைத்துக்கொண்டு சைக்கிளில் ஜெய்நாயக்கன்பட்டிக்கு ஜெயபால் சென்று கொண்டிருந்தார்.

    மதுரை-பெரியகுளம் சாலையில் சென்றபோது வத்தலக்குண்டுவில் இருந்து வந்த தனியார் பஸ் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட 2 பேரும் படுகாயமடைந்தனர்.

    அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஜெயபால் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது பேரன் சரணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் தலைமையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×